Published : 08 Sep 2025 12:09 AM
Last Updated : 08 Sep 2025 12:09 AM

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு நாளுக்கு ரூ.522 சம்பளம்

பெங்களூரு: ​பாலியல் வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டுள்ள ஹாசன் தொகு​தி​யின் முன்​னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு சிறையில் நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்​கப்​படு​கிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாலியல் குற்​றச்​சாட்​டில் ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு இங்கு நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. சக கைதி​களுக்கு புத்​தகம் வழங்​கு​வது, படிக்க வழங்​கப்​பட்ட புத்​தகங்​களின் பதிவுகளை பராமரிப்​பது உள்​ளிட்ட பணி​களை அவர் மேற்​கொள்ள வேண்டும். இதற்​காக அவருக்கு நாள் ஒன்​றுக்கு ரூ.522 சம்​பளம் தரப்​படு​கிறது.

சிறை விதி​களின்​படி, ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர்​கள் ஏதேனும் ஒரு வகை​யான உழைப்​பைச் செய்ய வேண்​டும், மேலும் அவர்​களது திறமை​கள் மற்​றும் விருப்​பத்​தை பொருத்து சிறையில் பணி​கள் வழங்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

நிர்​வாகப் பணி​களை கையாள்வ​தில் ரேவண்ணா அதிக ஆர்​வம் காட்டி வரு​வ​தாக தகவல் அறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ஆனால், சிறை நிர்வாகம் அவருக்கு நூல​கப் பணியை வழங்​கி​யுள்​ளது.முன்​னாள் பிரதமர் தேவ கவு​டா​வின் பேரன் பிரஜ்வல்​ ரேவண்​ணாஎன்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x