Published : 07 Sep 2025 11:28 PM
Last Updated : 07 Sep 2025 11:28 PM

4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை

புஷ்கர் சிங் தாமி | கோப்புப் படம்

சென்னை: 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான உத்​த​ராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்​துள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான பாஜக அரசு உத்​த​ராகண்​டில் அமைந்​தது. அப்​போது முதல் மக்​கள் நலத்​திட்​டங்​களை​யும், ஏராள​மான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் புஷ்கர் சிங் தாமி அரசு நிறைவேற்றி வரு​கிறது.

முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான அரசு இங்கு அமைந்த பின்​னர், தேர்​வு​களில் வினாத்​தாள் முன்​கூட்டி கசிவதைத் தடுக்க வகை செய்​யும் மோசடி எதிர்ப்​புச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. இதன் பின்​னர் உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் எந்​த​வித​மான அரசுத் தேர்வு வினாத்​தாள்​கள் கசிவதும் தடுக்​கப்​பட்​டது.

மேலும், திறன் வளர்ப்​பு, உலக அளவி​லான வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை உத்​த​ராகண்ட் அரசு சிறப்​பான முறை​யில் அமல்​படுத்தி வரு​கிறது. இந்​தத் திட்​டம் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் இளைஞர்​கள் அரசு வேலை​வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில் உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் உத்​த​ராகண்​டின் பழங்​குடி​யினர் நலத்​துறை நடத்​தும், அரசு ஆசிரம முறையி​லான பள்​ளி​களில் 15 உதவி ஆசிரியர்​களுக்கு பணி நியமன உத்​தரவை முதல்​வர் புஷ்கர் சிங் தாமி வழங்​கி​னார்.

இளைஞர்​களுக்கு அரசு வேலை​வாய்ப்​பில் முன்​னுரிமை என்ற சிறப்பு நோக்​குடன் இந்த வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை உத்​த​ராகண்ட் அரசு சிறப்​பான முறை​யில் செயல்​படுத்தி வரு​கிறது. 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் இளைஞர்​கள் உத்​த​ராகண்ட் மாநில பொதுத் தேர்​வாணை​யம் நடத்​திய தேர்​வு​களின் அடிப்​படை​யில் வேலை​வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர்.

மேலும் உத்​த​ராகண்ட் உதவி சேவைத் தேர்வு ஆணை​யம், உத்​த​ராகண்ட் மாநில மருத்​துவ சேவை​கள் தேர்வு ஆணை​யத்​தின் கீழும் ஏராள​மான இளைஞர்​கள் அரசு வேலை​வாய்ப்​பு​களுக்​குத் தேர்​வாகி​யுள்​ளனர். அது​மட்​டுமல்​லாமல் அரசின் கீழ் செயல்​படும் பல்​வேறு தேர்​வாணை​யங்​கள் மூலம் இளைஞர்​கள் அரசு வேலைகளுக்கு தற்​போதுதேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

இன்​னும் சில தேர்​வாணை​யங்​கள் மூலம் இளைஞர்​கள் தேர்வு செய்​யப்​படு​வதற்​கான இறுதி பரிந்​துரை விரை​வில் வரவுள்​ளது. வெளிநாட்டில் வேலை​வாய்ப்​பு 2022-ம் ஆண்டு நவம்​பர் 9-ம் தேதி, முதல்​வரின் திறன் வளர்ப்பு மற்​றும் உலக வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்​தத் திட்​டத்​தின் கீழ் ஓட்​டல்​கள், நர்​சிங், ஆட்​டோமொபைல் உள்​ளிட்ட துறை​களில் இளைஞர்​களுக்கு பயிற்சி வழங்​கப்​பட்டு அவர்​களுக்கு ஜெர்​மனி, ஜப்​பான் நாடு​களில் வேலை​வாய்ப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. தற்​போது இதில் 154 இளைஞர்​கள் பயிற்சி பெற்று 37 பேர் ஏற்​கெனவே ஜப்​பானில் வேலை பார்த்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x