Published : 06 Sep 2025 09:00 AM
Last Updated : 06 Sep 2025 09:00 AM

குளிர்பானங்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு: உடல் பருமன் குறைப்பு நிபுணர்கள் வரவேற்பு

புதுடெல்லி: உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் போன்ற பொருட்​களுக்கு சிறப்பு வரி​யாக 40 சதவீதம் வரி விதிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வரிஉயர்​வுக்கு உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும், பெங்​களூரு ஆஸ்​டர் ஒயிட்​பீல்ட் மருத்​து​வ​மனை ஆலோ​சகரு​மான டாக்​டர் பசவ​ராஜ் எஸ். கம்​பர் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார்.

உடல் பரு​மன், நீரிழிவு மற்​றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்​களுக்கு முக்​கிய பங்​களிக்​கும் சர்க்​கரை மற்​றும் காஃபின் கொண்ட பானங்​களை அதி​க​மாக உட்​கொள்​வதைத் தடுப்​ப​தற்​காக இந்த வரி உயர்வு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த முடிவை நாம் நிச்​ச​யம் வரவேற்​க வேண்​டும்.

புகை​யிலை, ஆல்​கஹால், சர்க்​கரை உணவு​கள், கார்​பன் ஏற்​றப்​பட்ட பானங்​கள் மீதான ஜிஎஸ்டி உயர்​வால் அதை உட்​கொள்பவர்​களின் எண்​ணிக்கை நிச்​ச​யம் குறை​யும். சர்க்​கரை உணவு​கள் மற்​றும் பானங்​களை அதி​க​மாக உட்​கொள்​வ​தால் இளைஞர்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு அதிக எடை, உடல் பரு​மன், நீரிழி​வு, நீரிழிவு தொடர்​பான வளர்​சிதை மாற்ற நோய்​கள் ஏற்படு​கின்​றன. இந்த 40 சதவீத வரி நடவடிக்கை மக்​களை தங்​கள் வாழ்க்கை முறை தேர்​வு​களை மேம்​படுத்​தத் தூண்​டக்​கூடும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும், ஜாந்த்ரா ஹெல்த்​கேர் நிறு​வனத்​தைச் சேர்ந்​தவரு​மான டாக்​டர் ராஜீவ் கோவில் கூறும்​போது, “சர்க்​கரை, கார்​பனேற்​றப்​பட்ட மற்​றும் ஆற்​றல் பானங்​கள் மீது 40 சதவீத ஜிஎஸ்​டியை அறி​முகப்​படுத்த மத்​திய அரசு எடுத்த முடிவு மிக​வும் வரவேற்​கத்​தக்​கது. நமது நாட்​டில் இந்​தி​யா​வில் உடல் பரு​மன், நீரிழிவு மற்​றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்​கள் மக்​களிடையே அதி​கரித்து வரு​கின்​றன. இதில் பெரும்​பாலானவை அதி​கப்​படி​யான சர்க்​கரை உட்​கொள்​ளலால் தூண்​டப்​படு​கின்​றன. இந்த பானங்​கள் மீதான விலையை உயர்த்​து​வதன் மூலம், ஜிஎஸ்டி கவுன்​சில் ஒரு தெளி​வான முடிவை எடுத்​துள்​ளது.

வரி அமைப்பை 5 சதவீதம் மற்​றும் 18 சதவீதம் என 2 முதன்மை அடுக்​கு​களாக எளிமைப்​படுத்​தும் ஜிஎஸ்டி கவுன்​சிலின் முடிவை வரவேற்​கிறோம். பாக்​கெட்​டில் வழங்​கப்​படும் தண்​ணீர் மற்​றும் காபி போன்ற அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் இப்​போது விலை மலி​வாக இருக்​கும். இதனால் நுகர்​வோருக்கு மலிவு விலை​யில், ஆரோக்​கிய​மான உணவு​கள் கிடைப்​பது உறுதி செய்​யப்​படு​கிறது. சமூக நல்​வாழ்​வுக்கு வரி​வி​திப்பு எவ்​வாறு ஒரு சக்​தி​வாய்ந்த கரு​வி​யாக இருக்க முடி​யும் என்​ப​தற்​கு இந்​த நடவடிக்​கை ஒரு சிறந்​த எடுத்​துக்​காட்​டு” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x