Published : 06 Sep 2025 08:25 AM
Last Updated : 06 Sep 2025 08:25 AM

மகாராஷ்டிர அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் இந்தியாவின் டெஸ்லா ‘ஒய்’ மாடலின் முதல் கார் ஒப்படைப்பு

புதுடெல்லி: மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்​ளக்​ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்​றுக்​கொண்​டார்.

கடந்த ஜூலை மாதத்​தில் அமெரிக்​காவைச் சேர்ந்த மோட்​டார் வாகன தயாரிப்பு நிறு​வன​மான டெஸ்லா இந்​தி​யா​வில் அதன் முதல் ஷோரூமை திறந்​தது. அப்​போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்​சர் பிர​தாப், தனது பேரனுக்கு பரி​சாக கொடுப்​ப​தற்​காக முன்​ப​திவு செய்​திருந்​தார். பசுமை வாக​னங்​கள் குறித்த விழிப்​புணர்வை பேரனிடம் ஏற்​படுத்​து​வதற்​காக அவர் இந்த காரை பரிசளிப்​ப​தற்கு முடிவு செய்​திருந்​தார்.

இதுகுறித்து அமைச்​சர் பிர​தாப் கூறுகை​யில், ``நாட்டு மக்​களிடையே மின்​சார வாக​னங்​கள் குறித்த விழிப்​புணர்வை பரப்​புவதற்​காகவே டெஸ்லா காரை வாங்​கி​யுள்​ளேன். அதி​லும் குறிப்​பாக, இன்​றைய இளைய தலை​முறை​யினருக்கு பசுமை வாக​னம் குறித்து அதி​கம் தெரியப்​படுத்த வேண்​டி​யுள்​ளது. அவர்​கள் இந்த காரைப் பார்த்து நிலை​யான போக்​கு​வரத்து குறித்து உண்​மை​யாகப் புரிந்​து​கொள்ள வேண்​டும்.

அடுத்த 10 ஆண்​டு​களில் மின்​சார வாக​னங்​களில் ஒரு மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்த மகா​ராஷ்டிர அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இதற்​காகவே அடல் சேது மற்​றும் சம்​ருதி எக்​பிரஸ்வே ஆகிய​வற்​றில் சுங்க கட்​ட​ணம் விலக்கு உள்​ளிட்ட ஏராள​மான சலுகைகளை மாநில அரசு வழங்கி வரு​கிறது.

மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து கழகம் (எம்​எஸ்​ஆர்​டிசி) ஏற்​கெனவே கிட்​டத்​தட்ட 5,000 மின்​சார பேருந்​துகளை பொதுப் போக்​கு​வரத்து பயன்​பாட்​டுக்​காக வாங்​கி​யுள்​ளது. மாநிலம் முழு​வதும் சார்​ஜிங்​ நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x