Published : 06 Sep 2025 08:20 AM
Last Updated : 06 Sep 2025 08:20 AM

சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு

பரேலி: கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார்.

ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சமோசா எங்கே என மனைவி கேட்​ட​போது, வாங்க மறந்து விட்​டேன் என சிவம் குமார் கூறி​யுள்​ளார். இதனால் இரு​வர் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்​டது. மறு​நாள் தனது குடும்​பத்​தினரை வரவழைத்த சங்​கீ​தா, சமோசா விஷ​யத்தை கூறி, தான் சொல்​வதை கணவர் கேட்​ப​தில்லை என புகார் கூறி​யுள்​ளார்.

இது குறித்து சிவம் குமாரிடம் சங்​கீ​தா​வின் பெற்​றோர் கேள்வி எழுப்​பினர். இதற்கு சிவம் குமார் கோபத்​தில் பதில் அளித்​த​தால், வாய்த் தகராறு ஏற்​பட்டு அடிதடி​யாக மாறியது. சங்​கீ​தா, அவரது தாய் உஷா, தந்தை ரம்​லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்​குதல் நடத்​தினர்.

இச்​சம்​பவம் குறித்து சிவம் குமாரின் தாய் போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து சங்​கீதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். காயம் அடைந்த சிவம் குமார் மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக கொண்டு செல்​லப்​பட்​டார். சமோசா பிரச்​சினை​யால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு, அடிதடி​யில் முடிந்​த​தாக பிலிப்​பித் காவல்​துறை துணை கண்​காணிப்​பாளர்​ அபிஷேக்​ யாதவ்​ தெரி​வித்​தா​ர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x