Published : 06 Sep 2025 08:16 AM
Last Updated : 06 Sep 2025 08:16 AM

அபு​தாபி லாட்​டரி​யில் ரூ.36 கோடி வென்ற இந்தியர் தாயகம் திரும்ப விருப்​பம்

புதுடெல்லி: அபு​தாபி​யில் சமீபத்​தில் நடந்த லாட்​டரி டிக்​கெட் குலுக்​கலில் உ.பி.யை சேர்ந்த சந்​தீப் குமார் பிர​சாத் (30) என்​பவருக்கு 15 மில்​லியன் திர்​ஹாம் பரி​சாக கிடைத்​துள்​ளது. இது இந்​திய மதிப்​பில் ரூ.36 கோடி​யாகும்.

இதுகுறித்து சந்​தீப் குமார் பிர​சாத் கூறிய​தாவது: என் வாழ்க்​கை​யில் இவ்​வளவு மகிழ்ச்​சி​யான தருணத்தை சந்​திப்​பது இதுவே முதல் முறை. ஆகஸ்ட் 19 அன்று 200669 என்ற எண் கொண்ட லாட்​டரி டிக்​கெட்டை வாங்​கினேன்.

செப்​டம்​பர் 3-ம் தேதி நடந்த நேரடி குலுக்கலின் ​போது நான் வாங்​கிய அபு​தாபி பிக் டிக்​கெட்​டுக்கு 15 மில்​லியன் திர்​ஹாம் பரி​சாக கிடைத்​துள்​ள​தாக தொகுப்​பாளர் ரிச்​சர்ட் அறி​வித்த போது என் வாழ்க்​கையே மாறி​விட்​டது.

துபாய் டிரை​டாக்​ஸில் தொழில்​நுட்ப வல்​லுந​ராக பணி​யாற்றி வரு​கிறேன். உத்தர பிரதேசத்​தில்​தான் எனது மனை​வி, இரண்டு சகோதரர் மற்​றும் ஒரு சகோதரி வசிக்​கின்​றனர்.

இவ்​வளவு பெரிய பரிசை வென்​றுள்ள நிலை​யில் இப்​போது குடும்​பத்​துடன் சேர்ந்திருக்க இந்​தியா திரும்ப ஆர்​வ​மாக உள்​ளேன். அங்கு சொந்த தொழிலை​யும் தொடங்க விரும்​பு​கிறேன். இவ்​வாறு பிர​சாத் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x