Published : 05 Sep 2025 07:30 AM
Last Updated : 05 Sep 2025 07:30 AM

பிஹாரில் 5 மணி நேரத்துக்கு முழு அடைப்பு போராட்டம்

பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்​றது. இந்​நிலை​யில், தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யில் பங்​கேற்ற ஒரு​வர், பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக 25 வயதுடைய ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசி​யதைக் கண்​டித்​து, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) சார்​பில் பிஹாரில் நேற்று மாநிலம் தழு​விய முழு அடைப்பு போராட்​டம் நடை​பெற்​றது.

காலை 7 மணி முதல் 12 மணிவரை நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சிகளைச் சேர்ந்த பெண் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் பங்​கேற்​றனர். 5 மணி நேரம் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள், காங்​கிரஸ் மற்​றும் ஆர்​ஜேடி கட்​சிகளைக் கண்​டிக்​கும் வாசகங்​கள் அடங்​கிய பதாகைகளை ஏந்​தி​யடி கோஷம் எழுப்​பப்​பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x