Last Updated : 05 Sep, 2025 07:46 AM

1  

Published : 05 Sep 2025 07:46 AM
Last Updated : 05 Sep 2025 07:46 AM

ராகுல் காந்தியின் யாத்திரையால் காங்கிரஸுக்கு பிஹார் தேர்தலில் பலன்?

புதுடெல்லி: பிஹாரில் காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ராகுல் காந்​தி, வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இது 25 மாவட்டங்​களைக் கடந்​தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம்​ (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-எம்​எல் பொதுச் செயலா​ளர் தீபங்​கர் பட்​டாச்​சார்​யா, விகாஷீல் இன்​சான் கட்​சித் தலை​வர் முகேஷ் சஹானி பங்​கேற்​றனர்.

பிஹாரில் மொத்​தம் உள்ள 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் சுமார் 100 தொகு​தி​களில் இந்த யாத்​திரை நடை​பெற்​றது. இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள திமுக தலை​வர் ஸ்டா​லின், சமாஜ்​வா​தி​யின் அகிலேஷ் யாதவ், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், டிஎம்​சி​யின் யூசுப் பதான் மற்​றும் சிவசே​னா​வின் சஞ்​சய் ராவத் ஆகியோர் இதில் கலந்து கொண்​டனர். பூர்​ணியா சுயேச்சை எம்​.பி. பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்​சனும் ராகுலுடன் யாத்​திரை​யில் கலந்து கொண்​டார்.

இதனால், வரும் நவம்​பரில் நடை​பெற​விருக்​கும் பிஹார் சட்​டப்​ பேரவை தேர்​தலுக்​காக ஆர்​ஜேடி தலை​மையி​லான எதிர்க்​கட்சி கூட்​ட​ணி​யின் நிலையை இந்த யாத்​திரை வலுப்​படுத்​தி​யுள்​ள​தாகக் கருதப்​படு​கிறது. அதேசம​யம், காங்​கிரஸுக்கு முஸ்​லிம் வாக்​கு​கள் கூடும் வாய்ப்​பு​களும் தெரி​கின்​றன. கடந்த 1989 பாகல்​பூர் கலவர வழக்​கு​களை சரி​யாக கையாள​வில்லை என்​ப​தால், காங்​கிரஸிடம் இருந்து முஸ்​லிம்​கள் வில​கத் தொடங்​கினர்.

முஸ்​லிம் வாக்​காளர்​கள் பலர் ஆர்​ஜேடி.க்கு மாறினர். கடந்த 1990-ல் முதல் முறை​யாக முதல்​வ​ரான லாலு, பிஹார் சிறு​பான்மை சமூகத்​தின் ஒரு முக்​கிய தலை​வ​ரா​னார். இதன் காரண​மாக, கடந்த 1990-ம் ஆண்​டுக்கு பின் காங்​கிரஸுக்கு பிஹாரில் பெரும் பின்​னடைவு ஏற்​பட்​டது. அதனால், சட்​டப்​பேரவை தேர்​தல்​களில் லாலு​வின் ஆர்​ஜேடி​யுடன் காங்​கிரஸ் கைகோத்​தது.

ஐக்​கிய ஜனதா தளம்​(ஜேடியூ) தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ் குமார், 2015-ல் ஆர்​ஜேடி தலை​மையி​லான மகா கூட்​ட​ணி​யில் இணைந்​தார். அந்த ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் 27 இடங்​களை வென்​றது. மீண்​டும் நிதிஷ் பாஜக​வுடன் இணைந்த பின் 2020 தேர்​தலில் காங்​கிரஸ் 70 இடங்​களில் போட்​டி​யிட்டு 19-ல் வெற்றி பெற்​றது. அப்​போது, 110 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸின் பலவீன​மான பிரச்​சா​ரங்​களால்​தான்​ மகா கூட்​ட​ணி ஆட்​சி அமைக்​கும்​ வாய்ப்​பை இழந்​தது நினை​வுகூரத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x