Published : 05 Sep 2025 07:21 AM
Last Updated : 05 Sep 2025 07:21 AM

காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்கவில்லை: தாமாக வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாடு முழு​வதும் உள்ள காவல் நிலை​யங்​களில் தடுப்​புக் காவலில் வைக்​கப்​பட்​டிருப்​பவர்​கள் மீது காவல் துறை​யினர் தாக்​குதல் நடத்​து​வ​தாக​வும் இதில் சிலர் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார் எழுந்​தது.

இத்​தகைய மனித உரிமை மீறல் செயலை தடுக்க, காவல் நிலைய வளாகத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்​தர​விட்​டது.

இது​போல, சிபிஐ, அமலாக்​கத் துறை மற்​றும் தேசிய புல​னாய்வு முகமை உள்​ளிட்ட விசா​ரணை அமைப்​பு​களின் அலு​வல​கங்​களி​லும் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்த உச்ச நீதி​மன்​றம் கடந்த 2020-ம் ஆண்டு உத்​தர​விட்​டது. பதிவு​களை ஓராண்​டுக்கு சேமித்து வைக்​க​வும் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், கடந்த 8 மாதங்​களில் மட்​டும் காவல் நிலை​யங்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்த 11 பேர் உயி​ரிழந்​த​தாக ஊடகங்​களில் செய்தி வெளி​யானது.

இந்த செய்​தி​யின் அடிப்​படை​யில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்​றும் சந்​தீப் மேத்தா அமர்வு நேற்று பிறப்​பித்த உத்​தர​வில், “காவல் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் சரிவர இயங்​க​வில்லை என ஊடகங்​களில் செய்தி வெளி​யாகி உள்​ளது. இது தொடர்​பாக தா​மாக முன்​வந்து பொதுநல வழக்கு பதிவு செய்ய வேண்​டும்​” என கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x