Published : 05 Sep 2025 07:00 AM
Last Updated : 05 Sep 2025 07:00 AM

இமாச்சல், உத்தராகண்ட் பேரிடருக்கு காடுகள் அழிப்பு காரணமா? - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட், பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் இந்​தாண்டு இதற்கு முன் இல்​லாத அளவில் நிலச்​சரிவு​களும், வெள்​ள​மும் ஏற்​பட்​டது. வெள்​ளத்​தில் அதி​கள​வில் மரங்​கள் வந்​தன.

இதுகுறித்து அனாமிகா ரானா என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல வழக்கு தொடர்ந்​தார். அதில், "அதி​கள​வில் ஏற்​பட்ட நிலச்​சரிவு காரண​மாக சாலைகள், நெடுஞ்​சாலைகள் பாதிப்​படைந்​தன. ஆறுகளில் அளவுக்கு அதி​க​மாக வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டது. இதற்​கான காரணத்தை அறிய புவி​யியல் மற்​றும் சுற்​றுச்​சூழல் நிபுணர் குழுவை அமைக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு அவசர​கால நிவாரணம், மீட்பு நடவடிக்​கை, பாது​காப்பு மற்​றும் முதலுதவி ஆகிய​வற்றை உறுதி செய்ய மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும்" என கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்​றும் நீதிபதி வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கூறிய​தாவது: வெள்​ளத்​தில் அதி​களவி​லான மரங்​கள் வந்​த​தாக ஊடகத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதைப் பார்க்​கும்​போது மரங்​கள் சட்​ட​விரோத​மாக வெட்​டப்​பட்​டுள்​ளது போல் உள்​ளது. இதன் காரண​மாக​வும் நிலச்​சரிவு ஏற்​பட்​டிருக்​கலாம். வளர்ச்​சிக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் இடையே சமநிலை இருக்க வேண்​டும். இது தொடர்​பாக சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் பரு​வநிலை மாற்​றம், தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம், இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் அரசுகள் பதில் அளிக்க நோட்​டீஸ் அனுப்ப வேண்​டும். இவ்​வாறு கவாய் கூறி​னார்.

அப்​போது சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்​தா, ‘‘இது தொடர்​பாக சுற்​றுச்​சூழல் அமைச்சக செய​லா​ளர், மற்​றும் மாநிலங்​களின்​ தலை​மை செய​லா​ளர்​களிடம்​ பேசுகிறேன்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x