Published : 04 Sep 2025 10:18 AM
Last Updated : 04 Sep 2025 10:18 AM

டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி

புதுடெல்லி: பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர். அந்த நாடு​களில் மதரீ​தியி​லான துன்​புறுத்​தல்​களால் அவர்​கள் இப்​படி இந்​தி​யா​வுக்​குள் வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மேற்​கூறிய 6 மதச் சிறு​பான்​மை​யினர், அதி​காரப்​பூர்வ பாஸ்​போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வுக்​குள் வந்​திருந்​தால், அவர்​கள் தொடர்ந்து இங்கு தங்​கலாம். அவர்​களு​டைய பாஸ்​போர்ட், விசா போன்ற ஆவணங்​கள் காலா​வ​தி​யாகி இருந்​தா​லும், 6 மதச் சிறு​பான்​மை​யினர் இந்​தி​யா​வில் தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்கை எடுக்​கப்​ப​டாது.

இதற்​காக இந்​திய குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 2025 கடந்த திங்​கட்​கிழமை முதல் அமலுக்கு வந்​துள்​ளது. அதே​போல், குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் (விலக்​கு) உத்​தரவு 2025-ன்​படி நேபாளம், பூடான், திபெத்​தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்​டில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு மே 30-ம் தேதிக்​குள் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​திய தூதரகத்​தின் மூலம் சிறப்பு உள்​நுழைவு பர்​மிட் மூலம் இந்​தி​யா​வுக்கு வந்​தவர்​களும் இங்கு தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், சீனா, மக்​காவ், ஹாங்​காங், பாகிஸ்​தான் வழி​யாக நேபாளம் மற்​றும் பூடான் மக்​கள் இந்​தி​யா​வுக்​குள் நுழைவதற்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 21-வது பிரி​வின் படி, பாஸ்​போர்ட், விசா போன்ற அதி​காரப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் இந்​தி​யா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சட்​டம் கடந்த ஏப்​ரல் மாதம் நிறைவேற்​றப்​பட்​டது.

பாஸ்​போர்ட், விசா காலம் முடிந்த பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினருக்கு இந்​தச் சட்​டப்​பிரிவு 23-ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.3 லட்​சம் அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

கல்​லூரி​கள், மருத்​து​வ​மனை​களில் சேர்ந்​துள்ள வெளி​நாட்​டினர்​கள் தங்​கள் விவரங்​களை தெரிவிக்​காமல் மறைத்​தா​லும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடி​யுரிமை திருத்த சட்​டம் கடந்த 2024 மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்​தது. அந்த திருத்த சட்​டத்​தின்​படி, கடந்த 2014-ம் ஆண்டு டிச.31-ம் தேதிக்கு முன்​ன​தாக இந்​தி​யா​வுக்கு அகதி​களாக வந்​தவர்​களுக்கு இந்​திய குடி​யுரிமை வழங்க வழி வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு 2014-ம் ஆண்​டில் இருந்து 2024 டிச.31-ம் தேதி வரை நீட்​டித்து மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x