Published : 04 Sep 2025 08:28 AM
Last Updated : 04 Sep 2025 08:28 AM
ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவை நேற்று முன்தினம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் கவிதா நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
ஹரீஷ்ராவ், சந்தோஷ் ஒருபுறமும் காங்கிரஸ், பாஜகவினர் மற்றொரு புறமும் வியூகம் வகுத்து என்னை வீழ்த்தி உள்ளனர். இது இத்துடன் நிற்காது. தந்தையே நீங்களும் அரசியல் துரோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு கவிதா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT