Published : 04 Sep 2025 08:13 AM
Last Updated : 04 Sep 2025 08:13 AM

பிரதமர், அவரது தாயாருக்கு எதிரான கருத்தை கண்டித்து பிஹாரில் இன்று முழு அடைப்புக்கு என்டிஏ அழைப்பு

பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப். 1-ம் தேதி வரை வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடை​பெற்​றது. இந்​நிலை​யில் தர்​பங்கா நகரில் அண்​மை​யில் இந்த யாத்​திரை​யின்​போது எதிர்க்கட்​சிகளின் ஒரு மேடை​யில், பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசப்​பட்​டது. காங்​கிரஸ் தொண்​டர்​களின் இந்​தப் பேச்​சுக்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசி​யதற்கு எதி​ராக பிஹாரில் இன்று மாநிலம் தழு​விய முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ஆளும் என்​டிஏ கூட்​டணி அழைப்பு விடுத்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலை​வர் திலீப் ஜெய்​ஸ்​வால் நேற்று கூறுகை​யில், ‘‘காலை 7 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை முழு அடைப்பு அனுசரிக்​கப்​படும். என்​றாலும் ரயில் போக்​கு​வரத்து உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய சேவை​களுக்கு எந்த பாதிப்​பும் இருக்​காது. இந்​தப் போராட்​டத்​துக்கு மகளிர் அணி தலைமை வகிக்​கும்’’ என்​றார்.

ஐக்​கிய ஜனதா தளம் தலை​வர் உமேஷ் குஷ்​வாகா கூறுகை​யில், “எதிர்க்​கட்​சிகளின் பேரணி​யில் பிரதமர் மற்​றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசி​யது தார்​மீக ரீதி​யாக​வும் அரசி​யல் ரீதி​யாக​வும் தவறு. இதற்கு இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் இது​வரை மன்​னிப்பு கேட்​க​வில்​லை.

நமது தாயார் மற்​றும் சகோ​தரி​களை அவர்​கள் அவம​தித்​துள்​ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து முழு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளோம். முழு அடைப்​பின்​போது மாநிலம் முழு​வதும் மகளிர் அணி போராட்​டங்​கள் நடத்​தும்’’ என்​றார். இதற்கிடை​யில் பிரதமர் மோடி, தன்​னை​யும் மறைந்த தனது தாயார் பற்​றி​யும் அவதூறாக பேசப்​பட்​டதை அறிந்து மிக​வும் வருந்திய​தாக கூறி​னார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “அரசி​யலுடன் எந்​தத் தொடர்​பும் இல்​லாத, இப்​போது உயிருடன் இல்​லாத எனது தாயார் பற்றி காங்கிரஸ், ஆர்​ஜேடி நிகழ்ச்​சி​யில் அவதூறாக பேசி உள்​ளனர். சகோ​தரி​களும் தாய்​மார்​களும் உணர்ந்த வலியை என்​னால் உணர முடிகிறது. இது மிக​வும் வேதனை​யானது. அரச குடும்​பத்​தில் தங்​கம், வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த இளவரச​ரால்​ ஏழைத்​ தா​யின்​ வலியை புரிந்​து​கொள்​ள முடி​யாது’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x