Published : 04 Sep 2025 07:54 AM
Last Updated : 04 Sep 2025 07:54 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டை

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதில் 60 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், வாக்​கு​கள் திருடப்​படு​வ​தாக கூறி காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி வாக்​காளர் அதி​கார யாத்​திரை மேற்​கொண்​டார். இந்த யாத்​திரை​யின் கடைசி நாளான திங்​கள்​கிழமை ராகுல் காந்தி பேசும்​போது, “வாக்கு திருட்டு தொடர்​பாக விரை​வில் ஹைட்​ரஜன் குண்டு வீச உள்​ளோம். அதன் பிறகு நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி​யால் தனது முகத்​தைக் காட்ட முடி​யாது” என்​றார்.

இதனிடையே, வாக்​காளர் பட்​டியலில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கெரா​வின் பெயர் 2 இடங்​களில் இருப்​ப​தாக பாஜக குற்​றம்​சாட்​டியது. இதுகுறித்து விளக்​கம் அளிக்​கு​மாறு தேர்​தல் ஆணை​யம் நேற்று முன்​தினம் அவருக்கு நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், பவன் கெரா​வின் மனைவி கோட்டா நீலி​மாவுக்கு புதுடெல்லி மற்​றும் தெலங்​கா​னா​வின் கைர​தா​பாத் தொகுதி என 2 இடங்களில் வாக்​காளர் அட்டை இருப்​ப​தாக பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா நேற்று குற்​றம்​சாட்​டி​னார். இதன் மூலம் காங்​கிரஸ் தலை​வர்​கள் பலரிடம் 2 வாக்​காளர் அடை​யாள அட்டை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

வாக்​கு​கள் திருடப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டு​பவர் தங்​கள் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் 2 வாக்​காளர் அட்டை வைத்​திருப்​பது பற்றி பதில் சொல்ல வேண்​டும் என மாள​வி​யா கேட்​டுக்​ கொண்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x