Published : 03 Sep 2025 07:47 AM
Last Updated : 03 Sep 2025 07:47 AM

பிஹார் பேரணியில் ‘பைக்’ இழந்தவருக்கு புதிய ‘பல்சர்’ பரிசளித்த ராகுல் காந்தி

பாட்னா: பிஹாரில் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்​துக்கு எதி​ராக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வாக்​காளர் அதி​கார யாத்​திரை மேற்​கொண்​டார். இவரது பேரணி கடந்த மாதம் 27-ம் தேதி தர்​பங்கா மாவட்​டத்​தில் நடை​பெற்​றது.

அப்​போது சாலை​யோர உணவகம் நடத்தி வரும் சுபம் என்​பவரிடம் அவரது பல்​சர் 220 மோட்​டார் பைக்கை போலீ​ஸார் இரவலாக பெற்​றுள்​ளனர். ஆனால் அந்த பைக்கை அவரிடம் திரும்ப ஒப்​படைக்​க​வில்​லை. சுபம் பல இடங்​களுக்கு சென்று தேடி​யும் பைக் கிடைக்​க​வில்​லை. இதுகுறித்து ஊடகத்​தினருடன் சுபம் பேசி​யிருந்​தார்.

இதையடுத்து கடந்த 31-ம் தேதி சுபத்தை டெல்லி காங்​கிரஸ் தலை​வர் தேவேந்​திர யாதவ் தொலைபேசி​யில் அழைத்து மறு​நாள் பாட்னா வரு​மாறு அழைப்பு விடுத்​தார். இந்​நிலை​யில் பாட்​னா​வில் கடந்த 1-ம் தேதி வாக்​காளர் அதி​கார யாத்​திரை நிறைவு விழாவில் சுபத்​துக்கு புதிய பல்​சர் 220 பைக் ஒன்றை ராகுல் காந்தி பரிசாக வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x