Published : 03 Sep 2025 07:31 AM
Last Updated : 03 Sep 2025 07:31 AM

​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: என் தாய் பற்றி அவதூறாக பேசி​யது எனக்கு மட்​டுமல்ல, நாட்​டில் உள்ள அனைத்து தாய்​மாருக்​கும் அவமானம் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்று வரு​கிறது. இதில், ராஷ்ட்​ரிய ஜனதா தளம், சமாஜ்​வாதி உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் பங்​கேற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யின்​போது, அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக​வினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பிஹாரில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் காணொலி மூலம் பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தாய்​தான் நமது உலகம். தாய்​தான் நமது சுயமரி​யாதை. பாரம்​பரியமிக்க பிஹாரில் சில தினங்​களுக்கு முன்பு நிகழ்ந்​ததை என்​னால் கற்​பனை செய்​து​கூட பார்க்க முடிய​வில்​லை. பிஹாரில் ஆர்​ஜேடி-​காங்​கிரஸ் சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என் தாய் பற்றி அவதூறாக பேசி உள்​ளனர்.

அந்த அவதூறு கருத்து என் தாய்க்கு மட்​டும் அவமானம் அல்ல. நாட்​டில் உள்ள தாய்​மார்​கள், சகோதரி​கள் மற்​றும் மகள்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் அவமானம். இதைக் கேட்​டு, பார்த்த பிறகு ஒவ்வொரு தாயும் எப்​படி மனம் வருந்தி இருப்​பீர்​கள் என்​பது எனக்​குத் தெரி​யும். என் இதயத்​தில் எவ்​வளவு வலி இருக்​கிறதோ அதே வலி பிஹார் மக்​களுக்​கும் இருக்​கும் என்​பது எனக்​குத் தெரி​யும்.

உங்​களைப் போன்ற கோடிக்​கணக்​கானவர்​களுக்கு நான் சேவை செய்ய வேண்​டும் என்​ப​தற்​காக என் தாய் என்னை அவரிட​மிருந்து பிரித்​தார். என் தாய் இப்​போது உயிருடன் இல்லை என்​பது உங்​களுக்கு தெரி​யும். அரசி​யலுடன் எந்​தத் தொடர்​பும் இல்​லாத, அவரைப் பற்றி காங்​கிரஸ், ஆர்​ஜேடி நிகழ்ச்​சி​யில் அவதூறாக பேசி உள்​ளனர். சகோ​தரி​களே, தாய்​மார்​களே நீங்​கள் உணர்ந்த வலியை என்​னால் உணர முடிகிறது. இது மிக​வும் வேதனை​யானது. ராயல் குடும்​பத்​தில் பிறந்த இளவரச​ரால் ஏழைத்தா​யின் வலியை புரிந்​து​கொள்​ள முடி​யாது. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x