Published : 30 Aug 2025 06:37 AM
Last Updated : 30 Aug 2025 06:37 AM

பெண்கள் தொழில் தொடங்க  முதல்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2005-ம் ஆண்டு ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்​றது முதலே பெண்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​காக பாடு​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பெண்​களை தன்​னிறைவு பெற்​றவர்​களாக உரு​வாக்​கு​வதற்​காக பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தப் பணி​யின் தொடர்ச்​சி​யாக, பெண்​களின் நலனுக்​காக மேலும் ஒரு முக்​கிய​மான முடிவை எடுத்​துள்​ளோம். முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

இதன் கீழ் வரும் செப்​டம்​பர் மாதம் ஒரு குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு பெண் பயனடைய​லாம். அது நீண்​ட​கால அடிப்​படை​யில் பெண்​களுக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும். இந்த திட்​டத்​தின் கீழ், பெண்​கள் தொழில் தொடங்க முதல்​கட்​ட​மாக ரூ.10 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​படும். 6 மாதங்​கள் கழித்து அவர்​கள் தொடங்​கிய தொழில் மதிப்​பீடு செய்​யப்​படும். அதையடுத்​து,

அவர்​களின் தேவைக்கு ஏற்ப ரூ.2 லட்​சம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும். மேலும் பெண்​களால் தயாரிக்​கப்​படும் பொருட்​களை விற்​ப​தற்​காக மாநிலம் முழு​வதும் சந்​தைகள் திறக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x