Last Updated : 30 Aug, 2025 09:05 AM

3  

Published : 30 Aug 2025 09:05 AM
Last Updated : 30 Aug 2025 09:05 AM

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கம் தொடக்கம்

காசி தமிழ்ச் சங்கம் தொடக்க விழாவில் வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் பேசுகிறார். அருகில் துணைத் தலைவர் வெங்கட்ரமண கனபாடிகள், தலைவர் சுப்பிரமணியம், உயரதிகாரிகள் டி.சரவணன், ஆர்.ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர்.

புதுடெல்லி: உ.பி.​யின் புனிதத் தலமான வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்​கம் என்ற ஓர் அமைப்பை இங்கு​உள்ள தமிழர்​கள் தொடங்கி உள்​ளனர். அனு​மர் காட் பகு​தி​யில் உள்ள காஞ்சி சங்கர மடத்​தின் கிளை​யான காஞ்சி காமகோடி பீடத்​தில் கடந்த புதன்​கிழமை (ஆக. 27) தொடக்க விழா நடை​பெற்​றது. இவ்​விழாவுடன் விநாயகர் சதுர்த்​தி​யும் கொண்​டாடப்​பட்​டது.

இங்கு உயர​தி​காரி​களாக இருக்​கும் தமிழர்​களான வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம், கூடு​தல் காவல் இணை ஆணை​யர் டி.சர​வணன், வரு​மான வரி விசா​ரணைப் பிரிவு துணை இயக்​குநர் ஆர்​.ஐஸ்​வர்யா ஆகியோர் குத்​து​விளக்கு ஏற்றி தமிழ்ச் சங்​கத்தை தொடங்கி வைத்​தனர்.

விழா​வில் எஸ்​.​ராஜலிங்​கம் பேசுகை​யில், “பன்​னெடுங்​கால​மாக தமிழ்​நாட்​டுக்​கும் காசிக்​கும் இடையறாத தொடர்பு உள்​ளது. இந்த வரலாற்று உண்​மையை உணர்ந்த பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய கல்வி அமைச்​சகம் மூலம் தொடர்ந்து காசி தமிழ்ச் சங்​கமம் நடத்​து​வ​தால், இந்​திய அளவில் தமிழுக்கு முக்​கி​யத்​து​வம் கிடைக்​கிறது. காசி வாழ் தமிழர்​கள் இதனை உணர்ந்து சங்​கத்​தின் மூலம் அரிய பணி​களை செய்​ய​வேண்​டும்’’ என்​றார்.

காசி தமிழ்ச் சங்​கத்​தின் தலை​வ​ராக காஞ்சி காமகோடி பீடத்​தின் மேலா​ளர் வி.எஸ்​.சுப்​பிரமணி​யம், பொதுச் செய​லா​ள​ராக பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக தமிழ் பிரி​வின் உதவிப் பேராசிரியர் த.ஜெகதீசன், துணைத் தலை​வர்​களாக காசி விஸ்​வ​நாதர் கோயில் அறக்​கட்​டளை​யின் முன்​னாள் உறுப்​பினர் கி.வெங்​கட் ரமண கனபாடிகள், எஸ்​.கோ​பால​கிருஷ்ணன், துணைப் பொதுச் செய​லா​ளர்​களாக கு.தவசி முரு​கன், சு.சிவசுப்​பிரமணி​யன், பொருளாள​ராக சிவசங்​கரி சோமசுந்​தரம், துணைப் பொருளாள​ராக பண்​டிதர் சந்​திரசேகர் திரா​விட் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர்.

நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் 8 பேரில் மகாகவி பார​தி​யாரின் கொள்​ளுப் பேத்தி ஜெயந்தி முரளி​யும் ஒரு​வர் ஆவார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பொதுச் செய​லா​ளர் த.ஜெகதீசன் கூறும்​போது, ‘‘காசி​யில் வாழும் தமிழர்​களை ஒருங்​கிணைத்​து, தமிழ்க் குடும்​பத்​தின் குழந்​தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்​பித்​தல், திருக்​குறள் வகுப்பு எடுத்​தல் உள்​ளிட்ட பணி​கள் தொடங்​க​வுள்​ளன’’ என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x