Published : 29 Aug 2025 06:47 AM
Last Updated : 29 Aug 2025 06:47 AM
அமராவதி: அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: விவசாயிகளிடமிருந்து குவிண்டால் வெங்காயத்தை ரூ.1,200-க்கு வாங்கி அதனை அந்தந்த மாவட்ட சமூக நலத்துறைக்கு சொந்தமான இடங்களில் உலர வைக்க வேண்டும்.
அதன் பின்னர் உழவர் சந்தைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகளும் நஷ்டமடைய மாட்டார்கள். பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்கும் நிலை ஏற்படாது. கள்ள சந்தை விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநில மருத்துவ துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் தலைமையில் அமராவதியில் நேற்று மருத்துவ துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் அமைச்சர் சத்யகுமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆந்திரா முழுவதும் கிராமங்களில் அரசு செலவில் ‘வில்லேஜ் கிளினீக்குகள்’ கட்டப்படும். ரூ.1,129 கோடி செலவில் கட்டப்படும் இந்த கிளினீக்குகள் மூலம் கிராம மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இவை 80 சதவீதம் மத்திய அரசு நிதியின் கீழ் கட்டப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT