Published : 27 Aug 2025 10:23 AM
Last Updated : 27 Aug 2025 10:23 AM

பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் - சுவாரசிய தகவல்கள்

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார்.

கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை கட்​டுப்​படுத்தி நாடு முழு​வதும் பிரபலம் அடைந்​தார். கடந்த 1972-ம் ஆண்​டில் இந்​திய உளவுத் துறை​யில் அஜித் தோவல் இணைந்​தார்.

மிசோரமில் செயல்​பட்ட தீவிர​வாத குழுக்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அவர் அனுப்​பப்​பட்​டார். அவரது தீவிர முயற்​சி​யால் கடந்த 1986-ம் ஆண்​டில் மத்​திய அரசுக்​கும் தீவிர​வாத குழுக்​களுக்​கும் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அந்த நாட்​டுக்கு அஜித் தோவல் அனுப்​பப்பட்​டார். இதற்​காக இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தில் அவர் பணி​யமர்த்​தப்​பட்​டார். அப்​போது பாகிஸ்​தானின் இளம் அரசி​யல் தலை​வர் நவாஸ் ஷெரீபின் மிக நெருங்​கிய நண்​ப​ராக தோவல் மாறி​னார்.

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத் அருகே கஹுதா என்ற பகுதி உள்​ளது. அங்கு கான் ஆராய்ச்சி மையம் செயல்​படு​கிறது. அந்த மையத்​தில் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டப் பணி​கள் நடை​பெறு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகின. கஹுதா பகு​திக்கு அஜித் தோவல் சென்​றார்.

பிச்​சைக்​கார​ராக வேட​மிட்டு கான் ஆராய்ச்சி மையத்தை வேவு பார்த்​தார். அங்​குள்ள சலூன் கடை​யில் ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானிகள் முடி​திருத்​தம் செய்​தனர். அந்த சலூன் கடைக்கு சென்ற அஜித் தோவல், முடிகளை சேகரித்து இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைத்​தார்.

அந்த முடிகளை ஆய்வு செய்​த​போது யுரேனி​யம் உள்​ளிட்ட கதிர்​வீச்சு இருந்​தது தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டம் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, உலக நாடு​களுக்கு ஆதா​ரத்​துடன் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. சர்​வ​தேச நாடு​களின் அழுத்​தம் காரண​மாக பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் சுமார் 15 ஆண்​டு​கள் தாமத​மாகின.

கடந்த 1988-ம் ஆண்​டில் பஞ்​சாபின் அமிர்​தசரஸில் உள்ள பொற்​கோயி​லில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நுழைந்​தனர். ஏற்​கெனவே கடந்த 1984-ம் ஆண்​டில் நடத்​தப்​பட்ட புளூ ஸ்டார் ஆபரேஷ​னால் பொது​மக்​கள் கடும் அதிருப்​தி​யில் இருந்​தனர். எனவே அது​போன்ற நடவடிக்​கையை மத்​திய அரசு எடுக்க விரும்​ப​வில்​லை. எனவே காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அடக்​கும் பொறுப்பு அஜித் தோவலிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதன்​படி பொற்​கோ​யிலுக்​குள் நுழைந்த தோவல், காலிஸ்​தான் தீவிர​வா​தி​களிடம் தன்னை பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்று அறி​முகம் செய்து கொண்​டார். காலிஸ்​தான் தீவிர​வா​தி​களோடு தங்​கியிருந்து அவர்​கள் குறித்த முழு​விவரங்​களை​யும் என்​எஸ்ஜி படைக்கு ரகசி​ய​மாக வழங்​கி​னார்.

தோவல் வழங்​கிய தகவல்​களின் அடிப்​படை​யில் என்​எஸ்ஜி படை​யின் கமாண்டோ வீரர்​கள், தொலை​வில் இருந்து ஒவ்​வொரு தீவிர​வா​தி​யாக சுட்​டுக் கொன்​றனர். இறு​தி​யில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள், இந்​திய ராணுவத்​திடம் சரண் அடைந்​தனர். இதற்​காக தோவலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்​கப்​பட்​டது.

கடந்த 1990-ம் ஆண்​டில் காஷ்மீர் தீவிர​வாதத்தை கட்​டுப்​படுத்த தோவல் அனுப்​பப்​பட்​டார். அப்​போது காஷ்மீரின் மிகப்​பெரிய தீவிர​வா​தி​யாக அறியப்​பட்ட குகா பாரேவை சந்​தித்த தோவல் அவரது மனதை மாற்​றி​னார். இதன்​காரண​மாக 1996-ம் ஆண்​டில் நடை​பெற்ற காஷ்மீர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் குகா பாரே போட்​டி​யிட்​டார். இதன்​மூலம் காஷ்மீரில் தீவிர​வாதம் ஓரளவுக்கு குறைந்​தது.

கடந்த 1999-ம் ஆண்டு காந்​தஹார் விமான கடத்​தலின்​போது, தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய இந்​திய குழு​வில் தோவலும் இடம்​பெற்​றிருந்​தார். கடந்த 1999-ம் ஆண்டு கார்​கி​லில் பாகிஸ்​தான் ராணுவம் ஊடுரு​வியது. இதைத் தொடர்ந்து வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக அஜித் தோவல் நியமிக்​கப்​பட்​டார்.

மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தி​லும் உளவுத் துறை தலை​வ​ராக இருந்த தோவல் கடந்த 2005-ம் ஆண்​டில் ஓய்வு பெற்​றார். அப்​போது அவருக்கு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் மகள் திரு​மணம் 2005-ம் ஆண்டு துபா​யில் நடை​பெற்​றது. திரு​மணத்​தின்​போது தாவூதை கொலை செய்ய இந்​திய உளவுத் துறை திட்​ட​மிட்​டது.

இந்த ஆபரேஷனுக்கு தோவல் வழி​காட்​டி​யாக செயல்​பட்​டார். இதன் ஒரு பகு​தி​யாக தாவூத்​தின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட விக்கி மல்​ஹோத்​ரா​வுடன் தோவல் நெருக்​க​மா​னார். இந்​திய உளவுத் துறை​யின் திட்​டத்தை அறிந்த தாவூத், மகளின் திரு​மணத்​தில் பங்​கேற்​க​வில்​லை.

இறு​தி​யில் தோவலின் உதவி​யுடன் விக்கி மல்​ஹோத்ரா மட்​டும் கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார்​. அப்​போது முதல்​ அஜித்​ தோவல்​ தேசிய பாது​காப்​பு ஆலோசக​ராக செயல்​பட்​டு வருகிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x