Published : 27 Aug 2025 10:15 AM
Last Updated : 27 Aug 2025 10:15 AM

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை -  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ​நாட்​டில் உள்ள சிறு நிறு​வனங்​கள், விவ​சா​யிகளை பாது​காக்​கும் விஷ​யத்​தில் எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் கவலை​யில்​லை’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி​யாக தெரி​வித்​தார். உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார்.

இதற்​கான உத்​தர​வில் நேற்று ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​படும். இந்த நடை​முறை இன்று அமலுக்கு வரு​கிறது. இந்​நிலை​யில், குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று நடை​பெற்ற பேரணி மற்​றும் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார்.

அப்​போது பிரதமர் மோடி பேசி​ய​தாவது: உலகள​வில் தற்​போது பொருளா​தார ரீதி​யாக அரசி​யல் செய்​வ​தில் ஒவ்​வொரு​வரும் பரபரப்​பாக இருக்​கின்​றனர். ஆனால்​,அகம​தா​பாத் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன். மகாத்மா காந்​தி​யின் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன்.

என்​னுடைய சிறு நிறு​வனங்​களைச் சேர்ந்த சகோ​தர, சகோ​தரி​கள், சிறிய கடை வைத்​துள்ள சகோ​தர, சகோ​தரி​கள், சிறு விவ​சாய சகோ​தர, சகோ​தரி​கள் யாராக இருந்​தா​லும், அவர்​களுக்கு மீண்​டும் மீண்​டும் உறுதி அளிக்​கிறேன். உங்​களு​டைய நலன், உணர்​வு​கள்​தான் இந்த மோடிக்கு முதன்​மை​யானது.

எனது நாட்​டில் சிறு நிறு​வனங்​கள் வைத்​திருப்​பவர்​கள், விவ​சா​யிகளைப் பாது​காப்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறேன். அதற்கு தடை​யாக எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை விட்​டுத்தர மாட்​டேன். அவர்​களுக்கு சிறு கஷ்டம் வரு​வதை என்​னுடைய தலை​மையி​லான அரசு பொறுத்​துக் கொள்​ளாது. எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவற்றை தாங்​கும் வலிமையை அதி​கரித்து கொண்டே இருப்​போம்.

இன்று ஆத்ம நிர்​பார் பாரத் அபி​யான் திட்​டம் குஜ​ராத்​தில் இருந்து மிகப்​பெரும் சக்​தி​யைப் பெற்​றுள்​ளது. இரு​பது ஆண்டு கடின உழைப்​பின் பலனாக இந்த மாற்​றம் நிகழ்ந்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி உறு​தி​யாக கூறி​னார். முன்​ன​தாக கடந்த சனிக்​கிழமை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் டெல்​லி​யில் பேசும்​போது, ‘‘வர்த்​தகத்​தையே தொழிலாக கொண்​டுள்ள அமெரிக்​கா, மற்ற நாடு​கள் வர்த்​தகம் செய்​வதை குற்​றம் சாட்​டு​வது முரணாக உள்​ளது.

இந்​தி​யா​வின் எண்​ணெய், சுத்​தி​கரிக்​கப்​பட்ட பொருட்​கள் வேண்​டாம் என்​றால், அவற்றை வாங்க வேண்​டாம். இந்​திய பொருட்​களை வாங்க சொல்லி உங்​களை யாரும் கட்​டாயப்​படுத்​த​வில்​லை. ஆனால், ஐரோப்​பிய நாடு​கள் வாங்​கு​கின்​றன. அமெரிக்கா வாங்​கு​கிறது. எனவே, உங்​களுக்கு பிரச்​சினை என்​றால், வாங்​கு​வதை நிறுத்​திக் கொள்​ளுங்​கள்’’ என்​று திட்​ட​வட்​ட​மாக கூறியது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x