Published : 26 Aug 2025 08:05 AM
Last Updated : 26 Aug 2025 08:05 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியோரின் விவரங்களை அளிக்கக்கோரி நீரஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு தகவல்கள் அளிக்க மத்திய தகவல் ஆணையம் 2016, டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் வழக்கு தொடுத்தது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சச்சின் தத்தா, பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ் விவரங்களை வழங்க மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT