Published : 25 Aug 2025 08:06 AM
Last Updated : 25 Aug 2025 08:06 AM
போபால்: மத்திய பிரதேச சிங்ரவுலியில் உள்ள நிலக்கரி சுரங்க பகுதியில் அரிய மண் தனிமங்களின் செறிவுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மாநில முதன்மைச் செயலாளர் (சுரங்கம்) உமாகாந்த் கூறியதாவது: சிங்ரவுலி பகுதியில் அரிய வகை மண் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, வெறும் தனிமங்களைப் பற்றியது மட்டுமல்ல. தூய்மையான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றியது ஆகும்.
நிலக்கரி துணைப்பொருட்களை முக்கிய வளங்களாக மாற்ற மத்திய பிரதேச அரசு தயாராக உள்ளது. மேலும் சுயசார்பு சங்கிலியை உருவாக்குவதிலும் இணைந்து செயல்பட சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த கண்டுபிடிப்பு நாட்டின் புவியியல் வலிமையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT