Published : 25 Aug 2025 07:38 AM
Last Updated : 25 Aug 2025 07:38 AM

வரதட்சணை கேட்டு கணவன் சித்ரவதை: மகனின் கண்முன்னே மனைவிக்கு தீ வைப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்​டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார்.

விபின்​-நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்​ளிட்​ட​வற்றை வரதட்​சணை​யாக கொடுத்​துள்​ளனர். இருப்​பினும், அது போ​தாது என கூறி ரூ.36 லட்​சம் பணம் கேட்டு நிக்​கி​யின் கணவர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் பல ஆண்​டு​களாக அடித்து துன்​புறுத்தி வந்​துள்​ளனர்.

இந்த நிலை​யில், கடந்த வியாழக்​கிழமை இரவு கணவன் மனை​விக்கு இடையே வரதட்​சணை தொடர்​பாக மீண்​டும் சண்டை வந்​துள்​ளது. அப்​போது, விபின் தனது தாயுடன் சேர்ந்து கொண்டு நிக்​கியை அடித்து துன்​புறுத்​தி​யதுடன் அவர் மீது திர​வம் ஊற்றி லைட்​ட​ரால் தீ வைத்து எரித்து கொடூர​மாக கொலை செய்​தார். இந்த சம்​பவம் அவரது 6 வயது மகன் கண் முன்னே நடந்​துள்​ளது.

இதுகுறித்து அந்த சிறு​வன் கூறுகை​யில், “எனது தந்​தை, தாத்தா பாட்​டி​யுடன் சேர்ந்து எனது அம்​மாவை அடித்து துன்​புறுத்​தினர். பின்​னர் ஏதோ திர​வம் ஒன்றை அம்மா மீது ஊற்றி லைட்​ட​ரால் தீ வைத்​தனர்’’ என்று வாக்​குமூலம் அளித்​துள்​ளார். இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உள்​ளது. இந்த வீடியோவை நிக்​கி​யின் மூத்த சகோதரி கஞ்​சன் எடுத்​துள்​ளார்.

நிக்​கி​யின் இறப்​புக்கு காரண​மான விபின் உடனடி​யாக போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். அவரது பெற்​றோர் மற்​றும் சகோதரர் தலைமறை​வாகி விட்​டனர். இந்த நிலை​யில், நேற்று போலீ​ஸின் பிடி​யில் இருந்து தப்​பிக்க முயற்சி செய்த விபினை நோக்கி போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில், அவரது காலில் குண்​டடிபட்​டது.

இதையடுத்​து, மருத்​து​வ​மனையில் விபின் சேர்க்கப்பட் டுள்ளார். மருத்​து​வ​மனை வளாகத்தை சுற்றி பலத்த பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் விபின் குடும்​பத்​துக்கு உள்ள தொடர்பு குறித்து வி​சா​ரணை நடந்து வரு​கிறது என போலீ​ஸார் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x