Published : 25 Aug 2025 06:40 AM
Last Updated : 25 Aug 2025 06:40 AM

​​​​​​​ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு; ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

புவனேஸ்வர்: ஒடிசா கடற்​கரை​யில் ஒருங்​கிணைந்த வான் பாது​காப்பு ஆயுத அமைப்​பின் முதல் சோதனையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வெற்​றிகர​மாக நடத்​தி​யது.

போர்க் காலங்​களில் எதிரி நாடு​களின் ஏவு​கணை​கள், ட்ரோன்​களை முறியடிக்க ஒருங்​கிணைந்த வான் பாது​காப்பு ஆயுத அமைப்பு (ஐஏடிடபிள்​யூஎஸ்) மிக முக்​கிய​மான​தாகும். இந்த ஐஏடிடபிள்​யூஎஸ்​-ன் முதல் சோதனை ஒடிசா கடற்​கரை​யில் ஆகஸ்ட் 23-ம் தேதி மதி​யம் 12.30 மணி​யள​வில் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டது. ஐஏடிடபிள்​யூஎஸ் என்​பது உள்​நாட்டு விரைவு எதிர்​வினை மேற்​பரப்பு வான் ஏவு​கணை​கள், குறுகிய தூர வான் பாது​காப்பு அமைப்பு ஏவு​கணை​கள், உயர் சக்தி கொண்ட லேசர் அடிப்​படையி​லான நேரடி ஆற்​றல் ஆயுதம் (டிஇடபிள்​யூ) ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பல அடுக்கு வான் பாது​காப்பு அமைப்​பாகும்.

இந்த சோதனை​களின்​போது இரண்டு அதிவேக ஆளில்லா வான்​வழி வாகன இலக்​கு​கள் மற்​றும் ஒரு மல்​டி-​காப்​டர் ட்ரோன் உள்​ளிட்ட மூன்று வெவ்​வேறு இலக்​கு​கள் ஒரே நேரத்​தில் வெவ்​வேறு வரம்​பு​கள் மற்​றும் உயரங்​களில் ஈடு​படுத்​தப்​பட்டு முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன. ஏவு​கணை அமைப்​பு​கள், ட்ரோன் கண்​டறிதல், அழிக்​கும் அமைப்​பு, ஆயுத அமைப்பு கட்​டளை உள்​ளிட்ட அனைத்து கூறுகளும் துல்லியமாக செயல்​பட்​டன. இந்த தனித்​து​வ​மான சோதனை​கள் நாட்​டின் பல அடுக்கு வான் பாது​காப்பு திறனை மேம்​படுத்​தும் என்​றும், எதிரி​களின் வான்​வழி அச்​சுறுத்​தல்​களுக்கு எதி​ரான பாது​காப்பை வலுப்​படுத்​தம் என்​றும் கூறி டிஆர்​டிஓ மற்​றும் ஆயுத படைகளுக்கு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பா​ராட்​டு தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x