Published : 24 Aug 2025 06:28 AM
Last Updated : 24 Aug 2025 06:28 AM

பிரதமர் மோடியை விமர்சித்த தேஜஸ்வி மீது உ.பி., மகாராஷ்டிராவில் வழக்கு பதிவு

ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைக்க நேற்று முன்​தினம் பிஹார் வந்​தார். முன்​ன​தாக ஆர்​ஜேடி சமூக ஊடக தளத்​தில், “இன்று பிஹாரின் கயா​வுக்கு வாக்​குத் திருடன் வரு​கிறார். பிஹாரி​களுக்கு முன்​னால் பொய்​களை சொல்​வார்’’ என்று கூறப்​பட்டு இருந்​த​தாக உ.பி.​யின் ஷாஜ​கான்​பூர் காவல் நிலை​யில் நகர பாஜக தலை​வர் ஷில்பி குப்தா புகார் அளித்​தார்.

அவர் தனது புகாரில், “பிரதமருக்கு எதி​ரான தேஜஸ்​வி​யின் அவதூறான கருத்து நாட்டு மக்​களிடையே பெரும் கோபத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்​றும் கூறி​யிருந்​தார். இது தொடர்​பாக நகரின் சதார் பஜார் காவல் நிலை​யத்​தில் பிஎன்​எஸ் சட்​டத்​தின் 353(2) பிரிவு (வதந்​தி​களை பரப்​புதல்), 197(1)ஏ பிரிவு (படம் மூலம் குற்​றம் சுமத்​துதல்) ஆகிய​வற்​றின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட காவல் கண்​காணிப்​பளர் ராஜேஷ் துவிவேதி நேற்று தெரி​வித்​தார்.

இது​போல் மகா​ராஷ்டி​ரா​வின் கட்​சிரோலி மாவட்​டத்​தில் பாஜக எம்​எல்ஏ மிலிந்த் நரோட்டி அளித்த புகாரின் பேரில் தேஜஸ்வி மீது பிஎன்​எஸ் சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இது தொடர்​பாக தேஜஸ்வி யாதவ் நேற்று கூறும்​போது, “இதற்கு நான் பயப்பட மாட்​டேன். தொடர்ந்து உண்​மையை பேசுவேன். அவர்​கள் என் மீது எத்​தனை வழக்​கு​கள் வேண்​டு​மா​னாலும் பதிவு செய்​யட்​டும்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x