Published : 24 Aug 2025 06:16 AM
Last Updated : 24 Aug 2025 06:16 AM

பாரத ஸ்டேட் வங்​கி​யிடம் ரூ.2,929 கோடி மோசடி செய்த வழக்கில் அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்​பாக தொழில​திபர் அனில் அம்​பானி​யின் வீடு, அலு​வல​கங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன் நிறு​வனம், பாரத ஸ்டேட் வங்​கி​யிடம் இருந்து ரூ.2,929 கோடி கடன் பெற்​றது. இந்த கடனை திருப்பி செலுத்​த​வில்​லை. இதுதொடர்​பாக பாரத ஸ்டேட் வங்​கி​யின் மும்பை கிளை சார்​பில் சிபிஐ-​யிடம் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று வழக்கு பதிவு செய்து அனில் அம்​பானிக்கு சொந்​த​மாக மும்​பை​யின் கஃபே பரேட் பகு​தி​யில் உள்ள வீடு மற்​றும் அவரது நிறு​வனங்​களில் சோதனை ​நடத்தினர். இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அரசு மற்​றும் தனி​யார் வங்​கி​கள் சார்​பில் அனில் அம்​பானி நிறு​வனங்​கள் மீது பல்​வேறு புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் பேரில் வழக்​கு​களை பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறோம்.

அந்த வகை​யில் பாரத ஸ்டேட் வங்கி சார்​பில் அனில் அம்​பானி நிறு​வனங்​கள் மீது ரூ.2,929 கோடி மோசடி புகார் அளிக்​கப்​பட்டு இருக்​கிறது. இதுதொடர்​பாக அனில் அம்​பானி​யின் வீடு மற்​றும் அவரது ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்ஸ் நிறு​வனத்​தின் அலு​வல​கங்​களில் சோதனை நடத்தி உள்​ளோம். இதில் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் கிடைத்து உள்​ளன. இதன் அடிப்​படை​யில் தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​படும். அனில் அம்​பானி நாட்டை விட்டு வெளி​யேறாத வகை​யில் ஏற்​கெனவே ‘லுக் அவுட்' நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

பாரத ஸ்டேட் வங்கி வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்ஸ் நிறு​வனம் பாரத ஸ்டேட் வங்​கி​யிடம் இருந்து பெற்ற கடன்​களில் ரூ.31,580 கோடியை முறை​கே​டாக பயன்​படுத்தி உள்​ளது. குறிப்​பாக அனில் அம்​பானி​யின் பல்​வேறு நிறு​வனங்​களின் கடன்​களை அடைக்க ரூ.13,667 கோடி பயன்​படுத்​தப்​பட்டு இருக்​கிறது. சுமார் ரூ.12,692 கோடி அனில் அம்​பானி​யின் இதர நிறு​வனங்​களுக்கு முறை​கே​டாக மாற்​றப்​பட்டு உள்​ளது. தற்​போது ரூ.2,929 கோடி மோசடி குறித்து சிபிஐ​யிடம் புகார் அளித்​துள்​ளோம். முறை​யான அனு​ம​தி​களை பெற்ற பிறகு அடுத்​தடுத்து பல்​வேறு புகார் மனுக்​களை சிபிஐ​யிடம் அளிப்​போம். இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x