Published : 23 Aug 2025 12:37 AM
Last Updated : 23 Aug 2025 12:37 AM

ஜப்பான்​ உச்​சி மாநாட்டில்​ பங்கேற்க பிரதமர்​ மோடி அடுத்த வாரம்​ பயணம்​

புதுடெல்​லி: இந்​தி​யா​வில்​ அடுத்​த 10 ஆண்​டு​களில்​ 68 பில்​லியன்​ டாலரை அதாவது இந்​தி​ய மதிப்​பில்​ சுமார்​ ரூ.6 லட்​சம்​ கோடியை முதலீடு செய்​ய ஜப்​பான்​ இலக்​கு நிர்​ண​யித்​துள்​ளது.

இதுகுறித்​து ஜப்​பானிய செய்​தி நிறு​வன​மான அசாஹி ஷிம்​பன்​ கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா-ஜப்​பான்​ வரு​டாந்​திர உச்​சி மா​நாட்​டில்​ கலந்​து கொள்​வதற்​காக பிரதமர்​ நரேந்​திர மோடி அடுத்​த வாரம்​ ஜப்​பானுக்​கு பயணம்​ மேற்​கொள்​ளஉள்​ளார்​. அப்​பேது அந்​நாட்​டு பிரதமர்​ ஷிகெரு இஷி​பாவை பிரதமர்​ மோடி சந்​தித்​துப்​ பேச உள்​ளார்​. இந்​த பயணத்​தின்​போது இரு​நாடு​களுக்​கு இடையி​லான பாது​காப்​பு ஒத்​துழைப்​பு தொடர்​பாக 2008-ம்​ ஆண்​டு மேற்​கொள்​ளப்​பட்​ட கூட்​டுப்​ பிரகடனத்​தை இந்​தி​யா​வும்​, ஜப்​பானும்​ திருத்​தி புதுப்​பிக்​க வாய்ப்​புள்​ளது. புதுப்​பிக்​கப்​பட்​ட ஒப்​பந்​தம்​ சமகால வாய்ப்​பு​களுக்​கான முன்​னுரிமை​களை பிர​திபலிக்​கும்​ வகை​யில்​ இருக்​கும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​தி​யா​வில்​ அடுத்​த 10 ஆண்​டு​களி்ல 10 டிரில்​லியன்​ யென்​ (68 பில்​லியன்​ டாலர்​) முதலீடு செய்வதற்​கான இலக்கை ஜப்​பான்​ நிர்ண​யித்துள்​ளது. இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு தனியார் நிறுவ னங்களின் முதலீடுகளை ஊக்கு விக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு அசாஹி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x