Published : 20 Aug 2025 06:29 AM
Last Updated : 20 Aug 2025 06:29 AM

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என நேருவே ஒப்புக் கொண்டார்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு பலன் இல்லை என்​பதை நேரு ஒப்​புக் கொண்​டார் ” என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். தேசிய ஜனநாயக கூட்​டணி எம்.பி.க்கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: பாகிஸ்​தானுடன் செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு எந்த பலனும் இல்லை என்​பதை முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேருவே ஒப்​புக் கொண்​டார் என கூறப்​படு​கிறது. நாட்​டை, ஜவஹர்​லால் நேரு இரண்டு முறை பிரித்​து​விட்​டார்.

இந்​தியா - பாகிஸ்தான் இடையே எல்லை வரையறுக்​கபட்​ட​போது ஒரு முறை​யும், சிந்து நிதி நீர் ஒப்​பந்​தம் செய்த போது மறு முறை​யும் இந்த பிரி​வினை நடை​பெற்​றது. சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் மூலம் 80 சதவீத நீர் பாகிஸ்​தானுக்கு கொடுக்​கப்​பட்​டது. இந்த ஒப்​பந்​தம் விவ​சா​யிகளுக்கு எதி​ரானது. பிறகு இந்த ஒப்​பந்​தத்​தால் இந்​தி​யா​வுக்கு பலன் இல்லை என்​பதை அவர் தனது செய​லா​ளர் மூலம் ஒப்​புக் கொண்​டார். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

பாஜக தலை​வர் ஜே.பி. நட்டா பேசுகை​யில், “கடந்த 1960-ம் ஆண்டு மேற்​கொள்​ளப்​பட்ட சிந்து நதி நீர் ஒப்​பந்​தம், முன்​னாள் பிரதமர் நேரு செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்​று. தனிப்​பட்ட லட்​சி​யங்​களுக்​காக நாட்டு நலனை விட்​டுக் கொடுத்து விட்​டார். நாடாளு​மன்​றத்​தில் ஆலோ​சிக்​காமல், நேரு இந்த முடிவை எடுத்​தார். ஒப்​பந்​தம் கையெழுத்​திடப்​பட்டு 2 மாதங்​களுக்கு பின்​னரே, இந்த விவ​காரம் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டு, பெயருக்கு 2 மணி நேரம் மட்​டுமே விவாதம் நடை​பெற்​றது.

அப்​போது நேரு​வின் முடிவுக்​கு, இளம் எம்​.பி.​யாக இருந்த வாஜ்​பாய் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். தனி மனிதனின் தவறான கொள்​கைக்​காக, நாடு இன்​றும் விலை கொடுக்​கிறது. காங்​கிரஸ் செய்த வரலாற்று பிழையை, பிரதமர் மோடி தற்​போது சரிசெய்து சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்தை நிறுத்​தி​வைத்​துள்​ளார் ” என்​றார்.

பாஜக எம்​.பி ரவி சங்​கர் பிர​சாத் கூறுகை​யில், “நா​டாளு​மன்ற அனு​மதி பெறாமல் சிந்து நிதி நீர் ஒப்​பந்​தத்​தில் மட்​டும் நேரு கையெழுத்​திட​வில்​லை. பாகிஸ்​தானுக்கு ரூ.80 கோடி நிதி​யும் வழங்​கி​னார். இந்த உண்​மை​களை பிரதமர் எடுத்​துரைத்​த
தற்​காக நாங்​கள்​ பெரு​மிதம்​ அடைகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x