Published : 20 Aug 2025 05:15 AM
Last Updated : 20 Aug 2025 05:15 AM

அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல் கார​சா​ர​மாக வாதிட்​டார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, உச்ச நீதி​மன்​றத்​துக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அந்த 10 மசோ​தாக்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​தனர். மேலும், சட்​டப்​பேர​வை​யில் மறுநிறைவேற்​றம் செய்​யப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்​தி​லும், குடியரசுத் தலை​வர் 3 மாத காலத்​தி​லும் ஒப்​புதல் அளிக்க வேண்​டு மென கால நிர்​ண​யம் செய்​தும் உத்​தர​விட்​டனர்.

இதையடுத்​து, அதி​காரப்​பகிர்வு தொடர்​பாக அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக 14 கேள்வி​களை உச்ச நீதி​மன்​றத்​துக்கு எழுப்பி குடியரசுத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார். இதற்கு விடை காணும் வகை​யில் இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான 5 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடங்​கியது.

அப்​போது தமிழக அரசின் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, பி.​வில்​சன் ஆகியோ​ரும், கேரள அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கே.கே.வேணுகோ​பாலும் ஆஜராகி வாதிட்​டனர்.

“இந்த வழக்​கில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களுக்கு தமிழ்​நாடு மற்​றும் பஞ்​சாப் வழக்​கு​களில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பத்த தீர்ப்​பின் வாயி​லாக பதிலளிக்​கப்​பட்​டுள்​ளது. ‘கூடிய விரை​வில்’ என்​ப​தற்கு விளக்​கம் காணப்​பட்டு தமிழக ஆளுநருக்கு எதி​ராக தமிழக அரசு தொடர்ந்த வழக்​கில் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் அரசி​யல் சாசன பிரிவு 143-ஐ பயன்​படுத்தி உச்ச நீதி​மன்​றத்​திடம் குடியரசுத் தலை​வர் கேள்வி​களை எழுப்பி விளக்​கம் கோர முடி​யாது. மொத்​தத்​தில், இந்த கேள்வி​களை குடியரசுத் தலை​வரின் கேள்வி​களாக கருத்​தில் கொள்​ளாமல், குடியரசுத் தலை​வர் வாயி​லாக மத்​திய அரசு எழுப்​பி​யுள்ள கேள்வி​களாகவே கருத வேண்​டும்” என வாதிட்​டனர்.

அதையடுத்து மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, “அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சிக்​கல் எழுந்​தால் ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கு​மான பங்கு என்ன என்​பதை விளக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் குடியரசுத் தலை​வர் இந்த கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளார். கால நிர்​ண​யம் செய்து இரு நீதிப​தி​கள் அளித்​துள்ள தீர்ப்பே இறு​தி​யாகி விடாது.

ஒரு​வேளை அரசியல் சாசன அமர்வு அந்த தீர்ப்பு தவறு என்றோ அல்​லது அதற்கு எதிர்​மறை​யான தீர்ப்​பையோ வழங்​கலாம். உச்ச நீதி​மன்​றம் வகுத்​துள்ள இந்த கால நிர்​ண​யத்​தால் சிக்​கல் எழுந்​துள்​ளது. ஏனெனில், இவ்​வாறு கால நிர்​ண​யம் செய்​யக்​கூ​டாது என்ற நோக்​கில்​தான் ‘கூடிய விரை​வில்’ என்ற வார்த்​தையை சட்​டமேதை அம்​பேத்​கர் பயன்​படுத்​தி​யுள்​ளார்” என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி சூரிய​காந்த், “இந்த வழக்கு மேல்​முறை​யீட்டு வழக்கு அல்ல. குடியரசுத் தலை​வரின் விளக்​கம் கோரும் கடிதம் மீதான விசா​ரணை, அவ்​வளவு​தான்” என்​றார். அதற்கு அட்​டர்னி ஜெனரல் ஆர்​.வெங்​கட்​ரமணி, “ஒரு விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்த பிறகு அதுதொடர்​பாக சந்​தேகம் இருந்​தால் அரசி​யல் சாசன பிரிவு 143-ஐ பயன்​படுத்தி குடியரசுத் தலை​வர் விளக்​கம் கோர முடி​யும்.

அந்த கேள்வி​களுக்கு உச்ச நீதி​மன்​ற​மும் பதிலளிக்க வேண்​டும். தமிழக ஆளுநருக்கு எதி​ரான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்றம், சட்​ட​மியற்​றும் அதி​கார வரம்​புக்​குள் சென்​று​விட்​டது. இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் அரசி​யல் சாசனத்தை மாற்றி எழு​தி​யுள்​ளது. இவ்​வாறு தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது” என கார​சா​ர​மாக வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி பி.எஸ்​.நரசிம்​மா, “மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநரின் செயல்​பாடு​களை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர முடி​யா​தா, இந்த வாதங்​களை எப்​படி விளக்​கம் கோரும் வி​சா​ரணை​யில் முன்​வைக்க முடி​யும், உச்ச நீதி​மன்​றத்​திடம் கேட்​டுள்ள இந்த விளக்​கம் பலவகை​யிலும் இருக்​கலாம்’’ என கருத்து தெரி​வித்​தார்​. பின்​னர்​ நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x