Published : 19 Aug 2025 08:38 AM
Last Updated : 19 Aug 2025 08:38 AM

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்​டி, நடை​பெற்ற தேர்த்​திரு​விழா​வில், மின்​சா​ரம் பாய்ந்து 6 பக்​தர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர். ஹைத​ரா​பாத் ராமாந்​த​பூரில் உள்ள கிருஷ்ணர் கோயி​லில் கிருஷ்ணாஷ்டமி மற்​றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்​டும் சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழு​வதும் வண்ண விளக்​கு​களால் அலங்கரிக்கப்​பட்​டிருந்​தன.

நேற்று முன்​தினம் இரவு கோயி​லில் தேர்த்​திரு​விழாவை நடத்த கோயில் நிர்​வாகம் முடிவு செய்​திருந்தனர். அப்​போது, தேரை இழுக்க பயன்​படுத்​தப்​படும் மற்​றொரு வாக​னம் பழுதடைந்​த​தால் என்ன செய்​வது என தெரி​யாமல் அனை​வரும் சங்​கடப்​பட்​டனர். அப்​போது, அப்​பகு​தியை சேர்ந்த இளைஞர்​கள் தேரை இழுத்​துச் செல்ல முன்​வந்​தனர். இதனால் தேர்த்​திரு​விழா களை கட்​டியது.

சிறிது தூரம் தேர் சென்ற நிலை​யில், தேரின் மேற்​பகுதி அங்​குள்ள மின் கம்​பி​யில் உரசி​யது. உடனே தேரில் மின்​சா​ரம் பாய்ந்​தது. இதனால் தேரின் கம்​பியை பிடித்து இழுத்து கொண்​டிருந்த 9 பக்​தர்​கள் தூக்கி எறியப்​பட்​டனர். மின்​சா​ர​மும் துண்​டிக்​கப்​பட்​ட​தால், அப்​பகு​தியே இருளில் மூழ்​கியது.

பின்​னர் காயம் அடைந்​தவர்​கள் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அவர்களில் 6 பேர் உயி​ரிழந்​தனர். தகவல் அறிந்த தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, மத்​திய இணை அமைச்​சர் கிஷண் ரெட்டி ஆகியோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். இந்த சம்​பவம் குறித்து ஹைத​ரா​பாத் போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x