Published : 19 Aug 2025 08:15 AM
Last Updated : 19 Aug 2025 08:15 AM

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சி.பி.ஆர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். | படம்: பிடிஐ |

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் (74), உடல்​நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப்​டம்​பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தமிழகத்​தைச் சேர்ந்​தவரும் மகா​ராஷ்டிர ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்வு செய்தது. இதையடுத்து, சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். இது தொடர்​பான புகைப்​படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்துள்ளார்.

அத்​துடன், “குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தேன். அவரின் நீண்​ட​கால பொது சேவை​யும் பல துறை​களில் பெற்ற அனுபவ​மும் நம் நாட்டை பெரிதும் வளப்​படுத்​தும். இது​வரை காட்டி வந்த அதே அர்ப்​பணிப்பு மற்​றும் உறு​தி​யுடன் அவர் தொடர்ந்து நாட்​டுக்கு சேவை செய்​யட்​டும் என வாழ்த்​துகிறோம்” என பதி​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x