Published : 19 Aug 2025 06:45 AM
Last Updated : 19 Aug 2025 06:45 AM

1.5 லட்சம் வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்

புதுடெல்லி: மியான்​மர், கம்​போடி​யா, வியட்​நாம் உள்​ளிட்ட தென்​கிழக்கு ஆசிய நாடு​களில் இருந்​த​படி சிலர் இணை​யதள மோசடி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இவர்​கள் பணப்​பரிவர்த்​தனைக்​காக இது​வரை இந்​தி​யா​வைச் சேர்ந்த 1,47,445 வங்​கிக் கணக்​கு​களை சட்​ட​விரோத​மாக பயன்​படுத்தி உள்​ளது தெரிய​வந்​துள்​ள​தாக மத்​திய உள் துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. 2024-ம் ஜனவரி மாத நில​வரப்​படி இந்த எண்​ணிக்கை 80,465 ஆக இருந்​தது.

குறிப்​பாக, மும்பை (26,255), டெல்லி (19,296), குர்​கான் (13,513), பெங்​களூரு (12,439), கொல்​கத்தா (8,527), ஜெய்ப்​பூர் (3,869), புனே (3,264), ஹைத​ரா​பாத் (2,959), லக்னோ (2,732) ஆகிய நகரங்​களில் உள்ள வங்​கிக் கணக்​கு​கள் மூலம் அவர்​கள் பணம் பெறு​தல், வேறு கணக்​குக்கு மாற்​று​தல் உள்​ளிட்ட பரிவர்த்​தனை​களை மேற்​கொண்​டுள்​ளனர்.

இதுத​விர, சென்னை (2,605), பாட்னா (2,384), டெல்லி (2,334) மற்​றும் அகம​தா​பாத் (2,231) நகரங்​களைச் சேர்ந்த வங்​கிக் கணக்​கு​களை​யும் பயன்​படுத்தி உள்​ளனர். இணைய குற்​ற​வாளி​கள் செயல்​ப​டா​மல் உள்ள வங்​கிக் கணக்​கு​களை பயன்​படுத்​துகின்​றனர். சில நேரங்​களில் கணக்கு வைத்​திருப்​பவரின் அறி​யாமையை தங்களுக்கு சாதகமாக பயன்​படுத்தி உள்​ளனர். இது சட்​ட​விரோத செயல் ஆகும். இந்​தி​யா​வில் இந்த ஆண்​டில் இது​வரை பல்​வேறு இணை​ய​வழி குற்றங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடை​பெற்​றுள்​ள​தாக புள்ளி விவரம் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x