Published : 18 Aug 2025 08:12 AM
Last Updated : 18 Aug 2025 08:12 AM
புதுடெல்லி: டிஜிபி அனுராக் குப்தாவுக்குப் பணி நீட்டிப்பு கோரிய ஜார்க்கண்ட் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனிடையே, அனுராக் குப்தாவை தற்காலிக டிஜிபியாக ஜார்க்கண்ட் அரசு நியமித்ததற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
மாநிலத்தின் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருக்க வேண்டும். அவரது பதவிக்காலம் 6 மாதம் நிலுவையில் இருக்க வேண்டும். டிஜிபியாக நியமிக்கப்படுபவர் 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்தது.
இது மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு இன்று விசாரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT