Published : 17 Aug 2025 07:07 AM
Last Updated : 17 Aug 2025 07:07 AM

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனைகளில் தேர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை விரை​வில் அறி​முக​மாவதற்கு முன்​பாகவே முக்​கிய சோதனை​களில் அது தேர்ச்சி பெற்​றுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நாட்​டில் உள்ள பல்​வேறு பாரம்​பரிய மலைப்​பாதைகளில் ‘‘ஹைட்​ரஜன் பார் ஹெரிட்​டேஜ்’’ திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க ரயில்வே அமைச்​சகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

சென்​னை​யில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎப்) உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த ரயில் சுத்​த​மான எரிசக்தி ஆதா​ர​மான ஹைட்​ரஜன் எரிபொருளில் இயக்​கப்பட உள்​ளது. பூஜ்ய கார்​பன் உமிழ்வு இலக்​கு​களை அடை​யும் வகை​யில் பசுமை போக்​கு​வரத்து தொழில்​நுட்​பத்தை நோக்​கிய பயணத்​தில் ஹைட்​ரஜன் ரயில் இந்​தி​யாவை முன்​னோக்கி நகர்த்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து ஐசிஎப் பொது மேலா​ளர் யு.சுப்​பா​ராவ் கூறிய​தாவது: மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயில் விரை​வில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. சுமை சோதனை​களை இந்த ரயில் வெற்​றிகர​மாக நிறைவு செய்​துள்​ளது. அதன் செயல்​பாட்​டில் சிறப்​பான முன்​னேற்​றம் காணப்​படு​கிறது. இது குறித்த தகவல்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். இவ்​வாறு சுப்​பா​ராவ் தெரி​வித்​தார்.

ஹரி​யா​னா​வின் ஜிந்த்​-சோனிபட் இடையி​லான 89 கி.மீ. நீள​முள்ள வழித்​தடத்​தில் முதல் ஹைட்​ரஜன் ரயில் தொகுப்​பின் கள சோதனை​களை இந்​திய ரயில்வே மேற்​கொள்ள உள்​ளது. இந்த நிலை​யங்​கள் வடக்கு ரயில்​வே​யின் டெல்லி பிரி​வின் நிர்​வாகக் கட்​டுப்​பாட்​டின் கீழ் வரு​கிறது. பெரும்​பாலான நாடு​கள் 500 முதல் 600 குதிரைத்​திறன் (HP) வரையி​லான திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில்​களை உரு​வாக்​கி​யிருந்​தா​லும், இந்​தியா 1,200 குதிரைத்​திறன் (HP) திறன் கொண்ட இன்ஜின் ஒன்றை உரு​வாக்கி ஒரு திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x