Published : 17 Aug 2025 06:52 AM
Last Updated : 17 Aug 2025 06:52 AM

இந்தியாவுக்கென சொந்தமாக சமூக ஊடக தளங்களை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்தை முன்​னிட்டு டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக்​கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அப்​போது டிஜிட்​டல் இறை​யாண்​மை​யின் அவசி​யத்தை அவர் வலி​யுறுத்​தி​னார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நாட்​டின் தொழில்​நுட்ப அமைப்​பு​கள் பாது​காப்​பாக​வும் சுதந்​திர​மாக​வும் இருக்க வேண்​டும். டிஜிட்​டல் சுயாட்​சியை வலுப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும். ஆபரேட்​டிங் சிஸ்​டம் முதல் சைபர் பாது​காப்பு வரை, ஆழமான தொழில்​நுட்​பம் முதல் செயற்கை நுண்​ணறிவு வரை, அனைத்​தும் நம்​முடைய​தாக இருக்க வேண்​டும்.

நமது யுபிஐ தளம் இன்று உலகையே ஆச்​சரியப்​படுத்​துகிறது. நம்​மிடம் திறமை உள்​ளது. இந்​தியா மட்​டுமே யுபிஐ மூலம் 50% நிகழ்​நேர பரிவர்த்​தனை​களை செய்​கிறது. நமது இளைஞர்​களுக்கு நான் சவால் விடு​கிறேன். வாருங்​கள்.. நமக்கு ஏன் சொந்த சமூக ஊடக தளங்​கள் இல்​லை? நாம் ஏன் மற்​றவர்​களை சார்ந்​திருக்க வேண்​டும்? இந்​தி​ய செல்​வம் ஏன் வெளி​நாட்டு​க்கு செல்ல வேண்​டும்?” என்​றார்.

எந்​தவொரு இறை​யாண்மை கொண்ட நாடும் அதன் தரவு, தகவல் தொடர்பு அமைப்பை பாது​காப்​பாக வைத்​திருப்​பது மிக முக்​கிய​மானது. நமது நாட்​டுக்கு சொந்​த​மாக ஆபரேட்​டிங் சிஸ்​டம் மற்​றும் சமூக ஊடக தளங்​களை உரு​வாக்​க வேண்​டும் என நீண்ட கால​மாக கோரிக்கை இருந்து வரும் நிலை​யில் பிரதமர்​ இவ்​வாறு கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x