Published : 16 Aug 2025 06:03 PM
Last Updated : 16 Aug 2025 06:03 PM

ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி - சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்​டாடப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையில், “வரும் தீபாவளி... இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும்” என்று கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“இந்​திய மக்​களின் வியர்​வை​யால் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்கி பயன்​படுத்த வேண்​டும். இந்த விவ​காரத்​தில் வணிகர்​களும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்​டும். கடந்த 8 ஆண்​டு​களில் ஜிஎஸ்​டி​யில் பெரிய சீர்​திருத்​தங்​களை செய்​துள்​ளோம். நாடு முழு​வதும் வரிச்​சுமை​யைக் குறைத்து உள்​ளோம், வரி முறையை எளிமைப்​படுத்தி உள்​ளோம். 8 ஆண்​டு​களுக்​குப் பிறகு, இந்த மதிப்​பாய்வை ஒருமுறை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்​பது காலத்​தின் கட்​டா​யம். இதற்​காக, உயர் நிலைக் குழு அமைக்​கப்​பட்​டது.

இந்தக் குழு பல்​வேறு கட்ட ஆய்​வு​களை நடத்​தி​யது. மாநில அரசுகளின் கருத்​துகளை கேட்​டறிந்​தது. இதன்​படி வரும் தீபாவளி பண்டிகை​யின்​போது சாமானிய மக்​களுக்கு பலன் அளிக்​கும் வகை​யில் வரி​கள் கணிச​மாகக் குறைக்​கப்​படும். சிறு, குறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள், சிறு தொழில்​முனை​வோரும் பெரிதும் பலன் அடை​வார்​கள். அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும். இது பொருளா​தார வளர்ச்​சிக்கு புதிய உத்​வேகத்தை அளிக்​கும்” என்றார் பிரதமர் மோடி.

இது குறித்து மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறும்​போது, “தற்​போது 5 சதவிதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற நான்கு பிரிவு​களில் ஜிஎஸ்டி வரி விதிக்​கப்​படு​கிறது. வரும் தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​துள்​ளார். இதன்படி ஐந்து மற்றும் 18 ஆகிய இரு பிரிவுகளில் மட்​டுமே ஜிஎஸ்டி வரி வி​திக்​கப்​படும். இதன்​படி ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18 சதவீத​மாகக் குறை​யும். எனினும் சில ஆடம்பர பொருட்​களுக்​கு 40% வரி வி​திக்​கப்​படும்​” என்​று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்​தன​.

இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, சுதந்திர தின உரையில், ஆர்எஸ்எஸ் பற்றி பிரதமர் மோடி கூறும்போது, “100 ஆண்​டு​களுக்கு முன்பு ஆர்​எஸ்​எஸ் நிறு​வப்​பட்​டது. அதன் தொண்​டர்​கள் ஒரு நூற்​றாண்டு கால​மாக தாய்​நாட்​டின் நலனுக்​காக வாழ்க்​கையை அர்ப்​பணித்து உள்​ளனர். சேவை, அர்ப்​பணிப்​பு, ஒழுக்​கம் ஆகியவை அதன் அடை​யாளங்​கள்.

உலகின் மிகப்​பெரிய தன்​னார்வ தொண்டு அமைப்​பாக ஆர்​எஸ்​எஸ் செயல்​படு​கிறது. அதன் சேவைக்கு பங்​களித்த தொண்​டர்​களை​யும் வணங்​கு​கிறேன். ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் அர்ப்​பணிப்​புள்ள பயணத்தில், தேசம் பெருமை கொள்​கிறது. இந்த நூறு ஆண்டுகால சேவை என்பது ஒரு பெருமை மிக்க பொற்காலம்” என்று பிரதமர் மோடி பேசியது அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டது காங்கிரஸ் கட்சி. நாட்டின் சுதந்திரத்துக்காகவும், வலிமையான பாரதம் அமையவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தியாகம் செய்தனர். ஆனால், அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். பாஜக அதிகாரத்தில் நீடிப்பது ஒழுக்கக்கேடு ஆகும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ் பற்றி பிரதமர் பேசியது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறுவதாகும். அடுத்த மாதம் பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள் வருவதால், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் திருப்திப்படுத்தவே இதுபோல பேசியுள்ளார்.

பிரதமர் மோடி இப்போது தனது பதவிக் காலத்தை நீட்டிக்க மோகன் பாககவத்தின் முழு தயவை நம்பியுள்ளார். தனிப்பட்ட மற்றும் அமைப்பின் லாபத்துக்காக சுதந்திர தினத்தை அரசியல் மயமாக்குவது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு பாதிப்பை உருவாக்கும்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறும்போது, “சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. சுதந்திரத்துக்கான எந்தப் போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது இல்லை. சுதந்திரத்துக்குப் போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாளில் ஆர்எஸ்எஸ் குறித்து பிரதமர் மோடி பேசியது சுதந்திரத்துக்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல்” என்று கொந்தளித்துள்ளார்.

பிரதமர் மோடி பேசியது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் கூறும்போது, “சுதந்திர தின உரையின்போது ஆர்எஸ்எஸ்ஸின் நூறு ஆண்டுகால வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்தது பாராட்டுக்குரியது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் சித்தாந்தம் தொடர்பாகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றுபட்டுள்ளன. பாஜக அரசியலில் பணியாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் அதற்கு வெளியே தேசத்துக்காகவும் சமூக சேவைக்காகவும் செயல்படுகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடுகள் உள்ளதாக ஊகங்கள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஒரே சித்தாந்த குடையின் கீழ் இணைந்த இரண்டு அமைப்புகள் ஆகும். நாங்கள் ஒரே சித்தாந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம், எங்கள் உறவில் எந்தப் பதற்றமும் இல்லை.

சிலர், அரசியல் காரணங்களுக்காக, எப்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்துள்ளனர், உதாரணமாக சில காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தனர். ஆனால், இறுதியில் ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்து மதத்துக்கும் நாட்டுக்கும் வேலை செய்கிறது என்பதை அறிந்தனர்.

நல்லவர்களை உருவாக்கும், நல்ல மனிதர்களை உருவாக்கும் வேலையை இந்த அமைப்பு செய்து வருகிறது, அது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலர், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்தால் அரசியல் ரீதியாக பயனடையலாம் என்று நினைக்கிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x