Published : 15 Aug 2025 06:34 AM
Last Updated : 15 Aug 2025 06:34 AM

ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலுடன் போரிட்ட எல்லை பாதுகாப்பு படையின் 16 வீரர்களுக்கு வீர தீர விருது

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது துணிச்​சலுடன் போரிட்ட, எல்லை பாது​காப்பு படை​யின் 16 அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. சுதந்​திர தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு துணிச்​சலுடன் செயல் ஆற்​றிய வீரர்​களுக்கு வீர தீர விருதுகள் வழங்​கப்​படு​வது வழக்​கம். காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் சுற்​றுலா பயணி​கள் 26 பேர் கொல்​லப்​பட்​டனர்.

இதற்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா மேற்​கொண்​டது. கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்​தானின் பல பகு​தி​களில் இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. பாகிஸ்​தான் ராணுவத்​தினர் எல்​லைப் பகு​தி​யில் துப்​பாக்கிச் சூடு மற்​றும் ட்ரோன் தாக்​குதலில் ஈடு​பட்​டனர். இவற்றை எல்லை பாது​காப்ப படை​யினர் மற்​றும் இந்​திய ராணுவத்​தினர் முறியடித்தனர்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில், எல்​லைப் பாது​காப்பு படையைச் (பிஎஸ்​எப்) சேர்ந்த ஒரு துணை கமாண்​டன்ட், 2 உதவி கமான்​டன்ட், ஒரு ஆய்​வாளர் உட்பட 16 பேர், இந்​தியா - பாகிஸ்​தான் எல்​லை​யில் துணிச்​சலான தாக்​குதல் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர். இவர்​கள் அனை​வருக்​கும் சுதந்​திர தினத்தை முன்​னிட்டு வீர தீர விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இது குறித்து பிஎஸ்​எப் விடுத்​துள்ள அறிக்​கை​யில், ‘‘ நாட்​டின் பாது​காப்​பில் முன்​னணி​யில் இருந்து செயல்​படும் எல்லை பாது​காப்பு படை மீது, நாடு வைத்​துள்ள நம்​பிக்​கைக்கு இந்த பதக்​கங்​களே சாட்​சி​யம்​’’ என தெரி​வித்​துள்​ளது.

1090 காவலர் பதக்​கங்​கள்: நாடு முழு​வதும் மத்​திய ஆயுத படைகள் மற்​றும் மாநிலங்​களில் பணி​யாற்​றும் சீருடை பணி​யாளர்​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய 1090 பேருக்​கு, சுதந்​திர தினத்தை முன்​னிட்டு காவலர் பதக்​கங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. மத்​திய உள்​துறை அமைச்​சகம் 233 பேருக்கு வீரதீர பதக்​கங்​களை வழங்​கி​யுள்​ளது. சிறப்​பாக பணி​யாற்றி 99 பேருக்கு குடியரசு தலை​வரின் பதக்​கங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. போற்​றத்​தக்க வகை​யில் பணி​யாற்​றிய 758 பேருக்​கும் சிறப்பு சேவை பதக்​கங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தீயணைப்​புத்​துறை, ஊர்​காவல் படையைச் சேர்ந்​தவர்​களும் இதில் இடம்​பெற்​றுள்​ள​தாக மத்​திய உள்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இதில் 152 விருதுகள், ஜம்மு காஷ்மீரில் பல்​வேறு ஆபரேஷன்​களில் ஈடு​பட்​ட​வர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. நக்​சல் ஒழிப்பு பணி​யில் ஈடு​பட்ட 54 பேருக்​கும் பதக்​கங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

வடக்கு கிழக்கு மாநிலங்​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய 3 பேருக்​கும், நாட்​டின் இதர பகு​தி​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய 24 பேருக்​கும் பதக்​கங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. தீயணைப்​புபடையைச் சேர்ந்த 4 வீரர்​களுக்​கும்,
ஊர்​காவல் படையைச் சேர்ந்த ஒரு​வருக்​கும் வீர தீர விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x