Published : 15 Aug 2025 05:59 AM 
 Last Updated : 15 Aug 2025 05:59 AM
புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில், உள்ள மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றார் என அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற நடைமுறை கடந்த 1951-52-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உள்ளது. தேர்தலில் யாராவது 2 முறை வாக்குகள் அளித்திருந்தால், அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்துடன் பகிர வேண்டும். அதைவிடுத்து வாக்காளர்கள் அனைவரையும் திருடர்கள் என கூறக் கூடாது.
வாக்கு திருட்டு என்ற பொய் கதை, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான நேரடி தாக்குதல் மட்டும் இன்றி, லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மை மீதான தாக்குதல். எனவே மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT