Published : 14 Aug 2025 07:02 AM
Last Updated : 14 Aug 2025 07:02 AM

எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது: பாக். பிரதமரின் மிரட்டலுக்கு எம்.பி. அசாதுதீன் ஒவைஸி பதில்

புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீரைக்கூட இந்தியா நிறுத்தி வைக்க முடியாது. தண்ணீரை நிறுத்த முயற்சித்தால், மறக்க முடியாத வகையில் பாகிஸ்தான் பாடம் கற்பிக்கும். சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் வரும் தனது உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது” என்றார்.

பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்​தில், அணு ஆயுத தாக்​குதல் அச்​சுறுத்​தல் விடுத்த நிலை​யில், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பும் மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் பேசி​யுள்​ளார்.

இது குறித்து கருத்து தெரி​வித்த ஹைத​ரா​பாத் எம்​.பி ஒவைஸி கூறிய​தாவது: ஒரு நாட்​டின் பிரதம​ராக இருக்​கும் ஷெபாஸ் ஷெரீப் இது போல் முறையற்ற வகை​யில் பேசக் கூடாது. இது​போன்ற பேச்​சுக்​கள் எல்​லாம் இந்​தி​யாவை பாதிக்​காது.

இந்​தி​யா​விடம் பிரம்​மோஸ் என்ற தொலை​தூர சூப்​பர்​சோனிக் ஏவு​கணை உள்​ளது என்​பதை பாகிஸ்​தான் நினை​வில் கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு ஒவைஸி கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x