Published : 14 Aug 2025 05:31 AM
Last Updated : 14 Aug 2025 05:31 AM

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு 11 ஆவணங்களில் ஒன்று கேட்பது சாதகமானதுதான்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிப​தி​கள் சூரிய காந்த், ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்​போது, “வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யின்​போது இந்​திய குடி​யுரிமைக்கு ஆதா​ர​மாக ஆதாரை ஏற்க மறுக்​கும் தேர்​தல் ஆணை​யம், வேறு 11 ஆவணங்​களை கேட்​பது வாக்​காளர்​களுக்கு எதி​ரான நடவடிக்கை ஆகும்’’ என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி சூர்​ய​காந்த், “11 ஆவணங்​களை​யும் கேட்​டால் அது வாக்​காள​ருக்கு எதி​ரான நடவடிக்​கை​தான். ஆனால், 11-ல் ஏதாவது ஒன்​றைத்​தானே கேட்​கிறார்​கள். அது​வும் ஏற்​கெனவே மேற்​கொள்​ளப்​பட்ட வாக்​காளர் திருத்​தப் பணி​யின்​போது 7 ஆவணங்​களில் ஒன்றை சமர்ப்​பிக்க தேர்​தல் ஆணை​யம் கூறி​யிருந்​தது. இந்த முறை 11 ஆக அதி​கரித்​திருக்​கிறது. இது வாக்​காளர்​களுக்கு சாதக​மான அம்​சம்​தான்’’ என்​றார்.

அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்​போது, “தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்ள பட்​டியலில் உள்ள ஆவணங்​கள் குறை​வான அளவிலேயே மக்​களிடம் புழக்​கத்​தில் உள்​ளன. உதா​ரண​மாக பாஸ்​போர்ட் ஒரு ஆதா​ர​மாக ஏற்​கப்​படு​கிறது. ஆனால் பிஹாரில் சுமார் 2% பேரிடம் மட்​டுமே பாஸ்​போர்ட் உள்​ளது’’ என்​றார்.

இதையடுத்து நீதிபதி பாக்சி கூறும்​போது, “அனைத்து தரப்பு மக்​களை​யும் உள்​ளடக்​கு​வதை உறுதி செய்​வதற்​காக, பல்​வேறு அரசுத் துறை​களிட​மிருந்து கருத்​துகளை கேட்டு​தான் 11 ஆவணங்​களை தேர்​தல் ஆணை​யம் பட்​டியலிட்டு இருக்​கிறது” என்​றார்.

முன்​ன​தாக நேற்று முன்​தினம் நடை​பெற்ற விசா​ரணை​யின்​போது, ஆதார் அட்டை என்​பது குடி​யுரிமை சான்று கிடை​யாது என்​றும் அதை குடி​யுரிமைக்​​கான ஆ​தா​ர​மாக ஏற்​க முடி​யாது என்​றும்​ தேர்​தல்​ ஆணை​யம்​ ​சார்​பில்​ ​வா​திடப்​பட்​டது. இதை நீதிப​தி​கள்​ ஏற்​றுக்​ கொண்​டனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x