Last Updated : 13 Aug, 2025 08:53 AM

 

Published : 13 Aug 2025 08:53 AM
Last Updated : 13 Aug 2025 08:53 AM

உ.பி.யின் பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? சர்ச்சை: இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்கு

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்​கா​பாத்​தி​லும் தர்​கா​வா? கோயி​லா? என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. இரு தரப்​பினர் நடத்​திய போராட்​டம் தொடர்​பாக 145 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உ.பி.​யின் பரூக்​கா​பாத்​தில் கைம்​கஞ்ச் பகு​தி​யில் ஷிவ்​ராய் மத் எனும் கிராமம் உள்​ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்​யத் என்​பவரின் சமா​தி​யுடன் ஒரு தர்கா உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை​களில் முஸ்​லிம்​களு​டன் இந்​துக்​களும் வந்து பாபா சைய்​யத்​தின் சமா​தியை வழிபடு​வது வழக்​கம்.

இங்கு வருடந்​தோறும் நடை​பெறும் சந்​தனக்​கூடு விழா​விலும் இந்​துக்​கள் கலந்​து​கொண்டு மதநல்​லிணக்​கம் பேணி வந்​தனர்.இந்​நிலை​யில் இந்த தர்கா அங்​கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்​டு, கட்​டப்​பட்​ட​தாக சமீபத்​தில் ஒரு புகார் கிளம்​பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்​சிங் என்ற கிராம​வாசி தர்​கா​வினுள் நுழைந்து அங்​கிருக்​கும் சமா​தியை சேதப்​படுத்​தி​னார்.

இது தொடர்​பான புகாரின் பேரில் கடக்​சிங் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டாலும் அவர் இன்​னும் கைது செய்​யப்​பட​வில்​லை. எனினும் தர்கா முன் சிசிடிவி கேம​ராக்​களை போலீ​ஸார் பொருத்​தினர். இந்​நிலை​யில் கடந்த 7-ம் தேதி தர்கா முன் கூடிய இந்​துத்​துவா அமைப்​பினர் சர்​சைக்​குரிய கோஷங்​களை எழுப்பி ஆர்​பாட்​டம் செய்​தனர். அவர்​கள் தர்கா முன் இருக்​கும் சிசிடிவி கேம​ராக்​களை அகற்​ற​வும் வலி​யுறுத்​தினர்.

இவர்​களுக்கு பதிலளிக்​கும் வகை​யில் முஸ்​லிம்​களும் அங்கு திரண்டு கோஷம் எழுப்​பினர். இதனால் இருதரப்​பிலும் மோதல் ஏற்​படும் சூழல் உரு​வானது. பிறகு போலீ​ஸார் தலை​யிட்டு அனை​வரை​யும் விரட்​டினர். தர்கா முன் அனு​ம​தி​யின்றி கூடியது மற்​றும் மதநல்​லிணக்​கத்​திற்கு குந்​தகம் விளை​வித்​த​தாக இருதரப்​பிலும் 45 பேரின் பெயரை குறிப்​பிட்​டும் 100 பேர் அடை​யாளம் தெரி​யாதவர்​கள் எனவும் கைம்​கஞ்ச் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர்.

இதற்​கிடை​யில் பதேபூர் தர்​கா​வில் நேற்று முன்​தினம் புகுந்து அமளி செய்த பாஜக, பஜ்ரங்​தளம் உள்​ளிட்ட இந்​துத்​து​வா​வினர் மீதும் வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இவர்​கள் தர்​கா​வினுள் நட்ட காவிக் கொடிகளை அகற்​றிய போலீ​ஸார் பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர்.

தர்​கா​வினுள் அத்​து​மீறிப் புகுந்து காவிக் கொடி, நட்டு பூஜைகள் செய்​த​தாக சுமார் 15 பேர் மீது வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இதில், தர்​கா​வினுள் புகுந்​த​தாக வெளிப்​படை​யாக ஊடகங்​களில் ஒப்​புக்​கொண்ட பதேபூர் மாவட்ட பாஜக தலை​வர் முக்​லால் பால் மற்​றும் இந்து மகா சபா துணைத் தலை​வர்​ மனோஜ் திரிவே​தி ஆகியோரின்​ பெயர்​கள்​ இடம்​பெறவில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x