Published : 13 Aug 2025 07:36 AM
Last Updated : 13 Aug 2025 07:36 AM

நாக்பூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற கணவர்

நாக்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலத்​தின் சியோனி மாவட்​டம், கரன்​பூர் என்ற கிராமத்தை சேர்ந்​தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார்.

ஜபல்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நாக்​பூரின் லோனாரா அரு​கில் செல்​லும்​போது இவர்​களின் பைக் மீது ஒரு லாரி உரசி​யது. இதில் சாலை​யில் விழுந்த கயார்சி லாரி​யின் சக்​கரத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். விபத்​துக்கு பிறகு லாரியை நிறுத்​தாமல் டிரைவர் தப்​பிச் சென்று விட்​டார்.

எதிர்​பா​ராத விபத்​தால் செய்​வதறி​யாது தவித்த அமித் அவ்​வழியே செல்​லும் வாக​னங்​களிடம் உதவி கோரி​னார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்​வர​வில்​லை. இதையடுத்து அவர் தனது மனை​வி​யின் உடலை மோட்​டார் சைக்​கிளின் பின் இருக்​கை​யில் வைத்து கட்​டிக்​கொண்டு சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார்.

இந்​நிலை​யில் ரோந்​துப் பணி​யில் இருந்த போலீ​ஸார் அவரை தடுத்து நிறுத்​தி, கயார்​சி​யின் உடலை பிரேதப் பரிசோதனைக்​காக நாக்​பூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அமித் யாதவை தடுத்து நிறுத்​தும் முன் போலீ​ஸார் எடுத்​த​தாக கூறப்​படும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்​களில் வைரலாகி வரு​கிறது. அது காண்​போரின் மனதை உருக்​கு​வ​தாக உள்​ளது.

விபத்து தொடர்​பாக நாக்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை மேற்​கொண்டுள்​ளனர். லாரியை​யும் அதன் டிரைவரை​யும்​ கண்​டறிய முயன்​று வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x