Published : 13 Aug 2025 07:14 AM
Last Updated : 13 Aug 2025 07:14 AM

காசாவில் இனப் படுகொலையா? - பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதிலடி

இஸ்​ரேல் தூதர் ரியூவென் அஸார், பிரி​யங்கா காந்தி

புதுடெல்லி: பாலஸ்​தீனத்​தின் காசா​வில் செய்​தி​யாளர்​கள் தங்​கி​யிருந்த கூடாரத்​தின் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் 5 பத்திரிகை​யாளர்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​ரேல் அரசு இனப்​படு​கொலை செய்து வரு​ம் நிலையில் இந்​திய அரசு மவுனமாக நிற்​பது வெட்​கக்​கே​டானது என்​றும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கடுமை​யாகக் கண்​டித்​திருந்​தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதி​வில் அவர் கருத்​தும் வெளி​யிட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில் பிரி​யங்​கா​வின் கருத்​துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்​ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்​போது, ‘‘ஹமாஸின் புள்​ளி​விவரங்​களை நம்ப வேண்​டாம். உங்​கள் ஏமாற்று வேலை​தான் வெட்​கக்​கே​டானது.

இஸ்​ரேல் 25,000 ஹமாஸ் தீவிர​வா​தி​களை கொன்​றது. இந்த மனித உயி​ரிழப்​பு​களுக்​கான பயங்​கர​மான செல​வு, ஹமாஸின் கேவல​மான தந்​திரங்​களான பொது​மக்​களுக்​குப் பின்​னால் ஒளிந்து கொள்​வது, வெளி​யேற அல்​லது உதவி பெற முயலும் மக்​களைச் சுடு​வது, அவர்​களது ராக்​கெட் தாக்​குதல்​கள் ஆகிய​வற்​றில் இருந்து வரு​கிறது. அங்கே இனப்​படு​கொலை நடக்​க​வில்​லை” என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x