Published : 13 Aug 2025 07:14 AM
Last Updated : 13 Aug 2025 07:14 AM
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடும் வகையில் பேசியிருந்தார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட, குர்ஆன் வசனத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடன் அடுத்த முறை போர் மூண்டால், என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காட்டவே அதைச் செய்தோம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான, குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலையை குறிவைத்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT