Published : 12 Aug 2025 09:09 AM
Last Updated : 12 Aug 2025 09:09 AM

ஆந்திரா இலவச பேருந்து திட்டத்தில் திருமலை - திருப்பதி இடையே பெண்களுக்கு அனுமதி இல்லை

அமராவதி: ஆந்​தி​ரா​வில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்​களுக்​கான இலவச அரசு பேருந்து பயண திட்​டம் ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதற்​கான நிபந்​தனை​கள் நேற்று வெளி​யானது.

இதன்​படி, பல்ல வெலுகு, (நகர்ப்​புறங்​களில் இருந்து கிராமங்​களுக்கு இயக்​கும் பேருந்​து) அல்ட்ரா பல்ல வெலுகு, நகர பேருந்​துகள், மெட்ரோ எக்​ஸ்​பிரஸ் மற்​றும் எக்​ஸ்​பிரஸ் ஆகிய 5 பிரிவு​களின் கீழ் இயக்​கப்​படும் அரசு பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​ய​லாம். ஆனால், திரு​மலை-​திருப்​பதி இடையே இயக்​கப்​படும் சப்​தகிரி எக்​ஸ்​பிரஸ் அரசு பேருந்​துகளில் இந்த திட்​டம் செல்​லாது.

இதே போன்​று, நான் - ஸ்டாப் பேருந்​துகள், அல்ட்ரா டீலக்​ஸ், சூப்​பர் லக்​ஸரி, ஸ்டார் லைனர், ஏசி பேருந்​துகளி​லும் இந்த திட்​டம் செல்​லாது. கண்​டக்​டர் சட்டை மற்றும் பேருந்​துகளி​ல் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்பட உள்​ளன. பேருந்து நிலை​யங்​களி​ல் அடிப்​படை வசதி​கள் செய்​ய​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​கான புதிய ஆணையை ஆந்​திர மாநில போக்​கு​வரத் துறை முக்​கிய செயலர் காந்​திலால் தண்டே நேற்​று பிறப்​பித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x