Published : 11 Aug 2025 07:11 AM
Last Updated : 11 Aug 2025 07:11 AM

இந்தியாவின் வளர்ச்சியால் பொறாமை: வெங்கையா நாயுடு கருத்து

புதுடெல்லி: எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி சில நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நமது வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அஜீரணப் பிரச்சினையால் அவர்கள் அவதிப்படுகின்றனர். உலக பொருளாதாரத்தில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி வருகிறது. விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பால் நம்நாடு நிச்சயம் மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x