Published : 11 Aug 2025 06:53 AM
Last Updated : 11 Aug 2025 06:53 AM

திருடப்பட்ட 5 லட்சம் செல்போன்களை மீட்க உதவிய செயலி

புதுடெல்லி: மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை சஞ்​சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரி 17-ம் தேதி அறி​முகம் செய்​தது. இது ஆங்​கிலம், இந்தி மற்​றும் 21 பிராந்​திய மொழிகளில் கிடைக்​கிறது.

இந்த செயலி, பயனர்​கள் தங்​கள் அழைப்பு அல்​லது குறுஞ்​செய்தி பதிவு​களி​லிருந்து சந்​தேகத்​துக்​கிட​மான அழைப்​பு​கள் அல்​லது செய்​தி​களை நேரடி​யாக புகார் அளிக்க உதவு​கிறது. அத்​துடன் தொலைந்​து​போன அல்​லது திருடு​போன செல்​போன்​களை கண்​காணித்து மீட்க அல்​லது முடக்​க​வும் உதவு​கிறது.

இந்த செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டது முதல் இது​வரை காணா​மல் போன 1 கோடிக்​கும் மேற்​பட்ட செல்​போன் இணைப்​பு​களை துண்​டித்​துள்​ளது. மேலும் 29 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட செல்​போன் இணைப்​பு​களை செயலிழக்​கச் செய்​துள்​ளது. திருடு போன 5.35 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட செல்​போன்​களை மீட்க இந்த செயலி உதவி உள்​ளது. இந்த செயலியை இது​வரை 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பதி​விறக்​கம் செய்​துள்​ளனர். சஞ்​சார் சாத்தி இணை​யதளத்தை இது​வரை 16.7 கோடி பேர்​ பார்த்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x