Published : 11 Aug 2025 06:50 AM
Last Updated : 11 Aug 2025 06:50 AM

உ.பி.யில் போலி காவல் நிலையம் நடத்தி நன்கொடை வசூல் செய்த 6 பேர் கும்பல் கைது

நொய்டா: உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் குற்ற புல​னாய்வு அலு​வல​கத்தை போலி​யாக நடத்தி மோசடி​யில் ஈடு​பட்ட 6 பேர் கும்​பலை நொய்டா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் புல​னாய்வு அலு​வல​கம் என்ற பெயரில் 6 பேர் கும்​பல் போலி அலு​வல​கத்தை நடத்தி வந்​துள்​ளது. காவல் நிலை​யத்​தின் போலி சின்​னங்​களு​டன் அந்த அலு​வல​கத்தை அவர்​கள் வடிவ​மைத்​துள்​ளனர். மேலும், போலி அடை​யாள அட்​டைகள், ரப்​பர் ஸ்டாம்ப் முத்​திரைகள், போலி ஆவணங்​கள், சான்​றிதழ்​களை​யும் அவர்​கள் பயன்​படுத்​தி​யுள்​ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்​கள் இணை​யதளத்​தை​யும் தொடங்கி பல தரப்​பில் இருந்து நன்​கொடை வசூலித்​துள்​ளனர். அந்த அலு​வல​கம் சட்​டப்​படி இயங்​கு​வது போல் பல தேசிய மற்​றும் சர்​வ​தேச சான்​றிதழ்​களும் போலி​யாக அந்த இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுபற்றி தகவல் அறிந்த நொய்டா போலீ​ஸார், நொய்டா பேஸ்-3 பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த போலி காவல் நிலை​யத்தை மூடி, அங்​கிருந்த போலி ஆவணங்​கள், அடை​யாள அட்​டைகள், பாஸ்​புக்​கு​கள், காசோலைகள் ஆகிய​வற்றை கைப்​பற்​றினர்.

இது குறித்து நொய்டா போலீஸ் துணை ஆணை​யர் சக்தி மோகஸ் அவஸ்தி கூறுகை​யில், ‘‘இந்த மோசடி தொடர்​பாக மேற்​கு​வங்க மாநிலத்​தைச் சேர்ந்த விபாஷ், ஆரக்​யா, பபுல், பின்​டு​பல், சம்​பம்​தல் மற்​றும் ஆஷிஷ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்’’ என்றார்.

உத்தர பிரதேசம் காசி​யா​பாத் கவி நகரில், ஹர்​ஸ்​வர்​தன் ஜெயின் என்​பவர் அன்​டார்​டிகா பகு​தி​யில் உள்ள வெஸ்​டார்​டிகா என்ற நாட்​டின் தூதர் என கூறி போலி தூதரகத்தை நடத்தி பலரிடம் மோசடி செய்​துள்​ளார். அது​போன்ற நாடே உலகத்​தில் இல்​லை. மேலும், செபோர்​கா, லடோனியா போன்ற சிறு நாடு​களின் பிர​தி​நி​தி​ போல​வும் ஹர்​ஸ்​வர்​தன் செயல்​பட்டு பலரிடம் பணம் பெற்​றுள்​ளார். இந்த மோசடி கண்​டு​பிடிக்​கப்​பட்ட சில ​வாரங்​களில்​ போலி ​காவல்​ நிலை​யத்​தை ஒரு கும்​பல்​ நடத்​தி மோசடி​யில்​ ஈடு​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x