Published : 10 Aug 2025 07:10 AM
Last Updated : 10 Aug 2025 07:10 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
நேற்று மீண்டும் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தனர். அங்கு இரு தரப்பினர் இடையே நேற்று 9-வது நாளாக துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றது.
அகால் அடர்ந்த வனப்பகுதி என்பதால், அங்கு பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாராசூட் கமாண்டோக்களும் தயார் நிலையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT